Tuesday, December 6, 2022

அகர எழுத்து

எழுத்துக்களில் நான் அகரமாக இருக்கின்றேன்   'பகவத் கீதை' ஆரும் அறியார் அகாரம் அவனென்று 'திருமந்திரம்' எழுதாத புத்தகத்தின் எழுத்து 'திருமந்திரம்' எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் ' எழுத்ததிகாரம்' "உந்தி முதலா முந்துவளி தோன்றித் தலையிலும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப் பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் உளப்பட எண் முறை நிலையான் உறுப்புற்றமைய  நெறிப்பட நாடி எல்லா எழுத்தும் சொல்லும் காலைப் பிறப்பின் ஆக்கம் வேறு வேறியல திறப்பட தெரியும் காட்சியான" 'பிறப்பியல்' "எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து சொல்லிய பள்ளி எழுதரு வளியின் பிறப்போடு விடு வழி உறழ்ச்சி வாரத்து அகத்தெழு வளியிசை அரில் தப நாடி அளவிற் கோடல் அந்தணர் மறைத்தே" "அஃது இவண் நுவலாது எழுந்து புறத்தி சைக்கும் மெய்தெறி வளியிசை அளபு நுவன்றி சினே" 'பிறப்பியல்' "எழுத்தெனப் படுவது அகர முதல் னகரம் வரை முப்பதுவகைப்படும்" உந்தியில் தோன்றி வரும் காற்று, தலை, தொண்டை ,நெஞ்சு, ஆகிய இடங்களில் நிலைபெற்று பல் ,உதடு, நாக்கு, மூக்கு, அண்ணாக்கு, உட்பட எட்டு இடங்களில் ஒரு உறுப்போடு மற்ற உறுப்பு பொருந்தி அமைதிபெற பிறப்பின் ஆக்கம் வேறு வேறு புலப்பட்டு வழங்கப்பெறும் என்ற கூறுபாடு உள்ளது. உள்நின்று எழும் காற்றாலாகிய இசையைப் பிணக்கமற ஆராய்ந்து  வரையறை கொள்ளுதல் அகத்தனின்று எழுந்து புறத்து இசைக்கும் பொருண்மை தெரிகின்ற காற்றின் இசை, உள்நின்று எழுந்து வெளியில் வந்து அளவு முறையோடு இசைக்கும் காற்று உள்நின்று எழுந்து உள்ளேயே அளவு முறையோடு இசைக்கும் காற்று அந்தணர் மறைக்குட்பட்ட எழுத்து  என்பது ஞானிகள் மட்டுமே அறிந்த எழுத்து அதுவே எழுதாத புத்தகத்தின் எழுத்து அந்த எழுத்துக்களில் அகரமாக இறைவன் இருக்கின்றான்

கருவில் கலந்த உயிரே

கருவில் கலந்த உயிரே   ====கருவில் கலந்த உயிரே==== (முன்பதிவு தொடர்சி) உங்களுக்குத்தான் தெரியும்,தாயின் கருவறையில் தான் நாம் பிறப்பதற்கு முன்னம் இருந்தோம் என.ஆனால் அதற்கு முன் எங்கிருந்தோம் என்றால் தந்தையின் உயிர்துளியில் இருந்தோம் என சில மக்குமங்குனிகள் எழுதி வெச்சிருக்கிறதையும் பார்த்திருக்கிறோம் அல்லவா?.உண்மையில் தாயின் கருவாக நாம் மலரும் முன் தந்தையின் உயிர்துளியாக இருந்திருக்கமுடியுமா என்றால் முடியவே முடியாத விஷயம் அது. தந்தையின் உயிர்துளியானது தாயின் கருமுட்டைக்கு உயிர்தான் கொடுக்கிறது,அது கருவை கொடுப்பதில்லை. தாயின் கருமுட்டையில் கருவாக இருந்தவன் யார் என்றால் “நான்..நான்” எனும் போதத்துடன் இப்போது உயிரோடு இயங்கும் “நீ” தான்.ஒருவேளை உனக்கு கருமுட்டையில் தந்தையின் உயிர்துளி ஊட்டபெறாமல் போயிருந்தால் என்னாகும்?, 27 நாட்களில் உன் “நான்” எனும் வாழ்வு முடிந்து போயிருக்கும்.தாயின் உதிரப்போக்கில் மடிந்து போயிருப்பாய். அந்த கருணை அருளே தந்தையின் உயிர்துளியின் வல்லபம்,அல்லவா?. “நான் நான்” என இருக்கும் போதத்தன்மை ஒருபோதும் இரு பொருட்களில் இருந்து பிறந்திருக்க வாய்ப்பேயில்லை என்பதை புரிந்துகொண்டாலே போதும், உன்னில் ஞானம் துளிர்விட ஆரம்பிக்கும்.உண்மையில் “நீ” தாயின் அங்கம், அவளுடன் ஒட்டிப்பிறந்தவன், கருவோடு உருவானவன், அந்த கருவுருவுக்கு தந்தையே உயிர் தாதா, உயிர் வழங்கியவன். ஒவ்வொருவருக்கும் அவரவர்களின் பயன்பாடு தன்மை வெளிப்பாடு நிகழ்கின்றது, அதன்படி செயல்புரிகின்றனர், காமம் ஒரு கண்ணாடி,அவ்வளவுதான். சிருஷ்டியின் பங்கு வேலை ஆரம்பிக்கின்றது.செவ்வனே ஒழுங்குற சிறக்கின்றது. மண்ணிலிருந்து மண்ணோடு மண்ணாகவே தொடர்பில் இருந்த உன் வாழ்வுக்கு ஒரு உயிரேற்றம் நிகழ்கின்றது,மண்ணோடு மண்ணாக வாழ்ந்துகொண்டிருந்த உனக்கு கருவறையில் உயிரேற்றம் என்பது ஒரு வரபிரசாதம்,இதைத்தான் இறைகருணை என்கிறோம்.மண்ணறையின் காரிருட்கூட்டதுட் அறிபுலம் செறிவற்று அந்தகாரத்துட் அல்லோலப்பட்டு மக்கித்திரிந்த உனக்கு ஒரு வாய்ப்பு அமையபெறுகின்றது, அந்த வாய்ப்பினை தந்தையின் சுக்கிலகூட்டத்துட் செலுத்தி வைத்தான் ஆதியிறை அருட்கோலம்.உன் பிறப்பே இறையின் இருப்பு, இறை தோற்ற செறிவு.அதற்க்கு பெயர்கள் எப்போதும் புனை பெயராகவே அமைந்துவிடும்.அதன் இருப்புநிலை அத்தகையது, அத்தன்மையது.அதன் வெளிப்பாடும் அத்தகையது, எங்கெங்கு தேடினும் அகப்படா அணுவுக்குள் அணுவாக அகண்டமாக நிற்கும் நுட்பத்திறம் கொண்டு சதா தனக்கு நிகரில்லா தனியனாக நிற்கின்றது. அந்த உயிர்துளியே உனக்கு தலைவாசலாக, உன் முக்திக்கு வித்தாக திகழ்கின்றது, அதனூடு பிரயாணிப்பாய். ஆதிஉதல் அமையப்பெற்றது தான் அது எனினும் அதனை நீ அறிந்திரா தன்மையினால் அதை விடுத்து பொய்யான மாயமயக்கத்தால் எதையெதையோ போய் கடவுள் என்கின்றாய். உன்னை ஜீவசிருஷ்டியாக சிருஷ்டித்த தன்மையே கடவுள், அதை அடைவதே உன் கடமை.உன்னில் குடியிருக்கும் அந்த இறைதுளியில் கலப்பாய்,நித்தியத்தை அடைவாய்.வேண்டாம் மண்ணோடு மண்ணான இந்த அனித்திய வாழ்வு.மண்ணிலிருந்து விண்ணுக்கு உன் பிரயாணம் அமையட்டும்

சிவலிங்கம்  - சிவராத்திரி

சிவலிங்கம்  - சிவராத்திரி =========    ========= பூவினில் இருந்து மொட்டு மலர்ந்த ரகசியந்தனை கண்டவர் எவரோ அவர் எனக்கும் குருவே. "சிவராத்திரியின் ரகசியம் மெய்பொருள் என அறிவாயாக." சத்தத்தின் உள்ளே சதாசிவத்தை காட்டி சித்தத்தின் உள்ளே சிவலிங்கத்தை காட்டி காட்டி தந்தவரை குருவென்று பணியலாம். இது மெய்பொருள் ரகசியம், உலக பொது ரகசியம். எல்லோரிடமும் அமைந்திருக்கும் மெய்பொருள் விஞ்ஞானம். ----riansathvicharam blogspot com

நானே நானில்லையே

💢💢 நானே நானில்லையே 💢💢 என்றோ அழிய போகும் உடலையே நான் நான் என சொல்லிட்டு இருக்கும் மனதிற்கு எப்போது தற்போதம் அற்று, மெய்யாக இருக்கும் ஜீவனை அறிய முடியும்? நான் இல்லை என்று சொல்லிக்கொண்டே நான் என்ற தன்முனைப்புடன், வீண் அகங்காரம் கொண்டு கர்மவினை செய்கிறது. கடவுளுக்கு பூஜை நமஸ்காரம் செய்வதாலோ, வெள்ளை அல்லது காவி உடை அணிந்து, நெற்றியில் பெரிய பட்டையிட்டு, ருத்ராட்சம் அணிவதாலோ, தினமும் சாதனை செய்கிறேன் என்று மனதை அங்குமிங்கும் அலைபாய விட்டுட்டு இருந்தாலோ, குருவே சரணம் என காலடியில் விழுந்து கிடந்தாலோ, ஒன்றும் நடவாது. கர்மச்சக்கரத்தில் இருந்து தப்பிக்கவே முடியாது. விண்ணில் இருந்து வந்த மெய்பொருள் அறியாத வரை, திரும்ப திரும்ப தாயின் வழியாக மண்ணில் பிறந்துக் கொண்டே தான் இருக்க போறோம். இயற்கை உண்மையாக, ஆதி அனாதியாக இருக்கும் மெய்யை உணர, மனம் எனும் ஆற்றை அறிவு எனும் தோணி கொண்டு கடப்பது சிறந்தது. அதாவது, மனதை அடக்கவோ, கட்டுப்படுத்தவோ முற்படாமல், மனதிற்கு அறிவு ஊட்ட ஊட்ட, மனமே மனதை செம்மை படுத்திக்கொள்ளும். அறிவு வர, நான் நான் என சொல்லும் மனம் அதிலிருந்து விடுபட்டு, ஜீவனை நோக்கி பிரயாணம் செய்யும். மனிதனுக்கு மட்டுமே தன்னை அறிந்துக்கொள்ளும் சிறப்பு உண்டு. ஆகையால் இந்த மனித பிறப்பை சரியாக உபயோகப் படுத்தி, தன்னை அறிந்து, நான் என்ற அகங்காரத்தினால் அழிந்து போகாமல், விண்ணிலிருந்து வந்தவனை பற்றிக் கொண்டால், மண்ணில் மறுபிறவியில் இருந்து விடுபடலாம். 💥💥 மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன் 💥💥

உங்கள் ஜீவன்

உங்கள் ஜீவன் தேடுகின்ற பொருளை உங்களால் கொடுக்க முடியவில்லைஇதனால்  உங்கள்  ஜீவன்  திருப்தியடையவில்லை ஆனால் நாம் உடல்.வாய்,,கண், மூக்கு,செவி,இவைகளுக்கு தேவையானதை கொடுத்து திருப்தி அடையும் செய்கின்றோம் இவைகளில் திருப்தி  அடையாத ஜீவன் பரமாத்மாவை தேடுகின்றது. இதை தரிசனம் செய்யவே இவன் பிறந்தான்,ஆனால் இவன் ஜீவன் வெளியே ஓடிக்கொண்டு இருக்கிறது

அஹ நாதம்

அஹ நாதம் -------------------- அஹநாதமென்பது நமது அகத்தில் இடையறாது ஒலித்துக் கொண்டிருக்கும் ஒலியாகும்! இந்த நாதத்தை யாரும் இலகுவாக தெரிந்திருப்பதில்லை. நமக்குள் வீற்றிருக்கும் ஆன்மாவின் தெய்வீக நாதமாகிய அஹநாதத்தை உணர்ந்து அதில் லயித்து நம் கர்ம வினைகளை அறுத்து அதன்மூலம் இறப்பிறப்பற்ற பெருநிலையை பெற வைப்பதே அஹநாத யோகமாகும்! நாதம் எனப்படுகின்ற சப்தமாகிய ஒலியானது இந்த பிரபஞ்சத்தில் முதல்முதலாக தோன்றியதாகும். இந்த தெய்வீக சப்தத்தினால் தான் அண்டசராசரங்களும் அனைத்துப் படைப்புகளும் உருவானது. பிரபஞ்ச தோற்றத்திற்கு மூலமும் முதலுமாக இந்த நாதமே விளங்கிற்று. சகலவற்றின் ஆதார சக்தியும் அதுவேயாகும். இதனால்தான் புனித பைபிளில்:- "தொடக்கத்தில் வாக்கு இருந்தது, அவ்வாக்கு கடவுளோடு இருந்தது, அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது, வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார்,அனைத்தும் அவரால் உண்டாயின, உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை. " (யோவாள் : 1 -  1,2,3.) அதாவது, ஆதியில் சப்தம் ஒன்றே வியாபித்திருந்தது. இந்த சப்தம் இறைவனுக்குள் ஐக்கியமாகி இருந்தது. இந்த சப்தமும் இறைவனும் ஒன்றே எனக் கூறலாம். இந்த சப்தத்தின் ரூபமாகிய இறைவன் எல்லாவற்றையும் தோற்றுவித்தான். இதுவே புனித திருக்குரானிலும் ஆண்டவர் கல்மா அல்லது குன் என்று சொல்லப்படும் சப்தத்தினாலே இந்த உலகத்தைப் படைத்தார் என்று கூறப்படுகிறது. இதைனையே குருநானக் சப்தம் அல்லது தூர் - கீ - பானி (மூலநாதம்) ஸீல்தான் - உல் - அஜ்கர் (ஜெபங்களின் சக்கரவர்த்தி) என குறிப்பிடுகிறார். ரிக வேதத்தில் "யாவத் பிரம்ம சிரேஸ்பம் தாவதீ வாக" அதாவது பிரம்மம் எவ்வளவு உயர்ந்ததோ, அவ்வளவு' வாக்கு 'உயர்ந்தது. வாக்கு என்பது சப்தம். வேதங்கள் யாவிலும் இறைவன் ஆகாச வாணியின் (ஓங்காரம்) மூலமாக சகலத்தையும் படைத்தார் என்று கூறுகிறது. இதையே மகான்கள் எல்லோரும் சப்தம், நாதம், வாக்கு, வாணி என்று கூறுகிறார்கள். இதனை சட்டைமுனி என்ற சித்தர் அழகாக கூறுகிறார். "நாதமப்பா யோகத்தில் ஐந்து நாதம் நலமான மௌனத்தில் ஐந்து நாதம் வேதமப்பா கடந்திடந்தே சுத்த நாதம் வெட்ட வெளிக்குள்ளே யொருநாதமுண்டு பாதமப்பா கடந்திடந்தேயந்த நாதம் புகழாகச் சேவித்து நிற்குமென்றும் காதமப்பா தூரமில்லை அந்தோ அந்தோ கண்ணுக்குள் விண்ணுக்குள் கலந்துகாணே " இதனை திருமூலரும் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். " ஓங்காரமே உலகேழும் படைப்பதும் ஓங்காரமே உலகேழும் துடைப்பதும் ஓங்காரமே உலகோடுயிர்தானே ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும் பாசம் பறக்கப் பரிந்துயிராய் நிற்கும் ஓசையதன் முணம்போல விடுவதோர்  ஓசையாம் ஈசனை உணர வல்லவர்க்கே மணிகடல் யானை வார்குழல் மேகம் அணி, வண்டு, தம்பி வளை பேரிவையாம் தணிந்தெளு நாதம் தாமிவை பத்தும் பணிந்த வர்க்கல்லாது பார்க்க வொண்ணாதே " என்று நாதமே எல்லா தோற்றத்திற்கும் காரணம் என்றும், இறைவனே நாதவடிவானவன் என்றும் குறிப்பிடுகின்றார். இது" துனாத் மகா நாதம் " என அழைக்கப் படும். ஏனெனில் இது வாயினால் கூறாமல் ஆத்மாவில் ஒலித்துக் கொண்டிருக்கும் புனித சப்தம்! யோக சந்தியா என்னும் நூலில் இந்த அஹநாதம் பற்றி கூறப்பட்டுள்ளது. சாந்மதக்கிய உபநிஷத்திலும் மூன்றாவது அத்தியாயத்தில் சூரியனிலிருந்து இந்த நாதம் தோன்றியதாக கூறப்படுகிறது. வாகம் பரணி என்று ரிக் வேதத்திலும் அதர்வண வேதம் 30 வது சுலோகத்திலும் நாதத்தின் மகிமை கூறப்படுகிறது. அஹடயோக பிரதீபிகாவிலும் இந்த அஹநாதம் பற்றி கூறப்பட்டுள்ளது. மேலும் சமணர்களின் புனித நூலில் இதனை திவ்யத்வனி (அண்டங்களின் ஓசை) என்று குறிப்பிடப்படுகிறது. கிரேக்கர்கள்" லோகஸ்" என்றும், சீனர்களின் புனித நூலில் "தாவோ" என்றும், சௌராஷ்டிரர்கள் "சரோஸ்" என்றும் அகநாதத்தை விவரிக்கிறார்கள்! ஆன்ம நாதமாகிய இந்த அஹ நாதத்தினுடன் ஆன்மா தொடர்பு கொள்ளும் போது தான் அது கர்மத்திலிருந்து விடுதலை அடைய முடியும்! ஆகவே எங்கும் நிறைந்த எல்லாவற்றுக்கும் மூலமான சப்தத்தை தன் ஆன்மாவின் உள்ளே அறிந்து அதில் லயித்து உணர்ந்து ஆனந்திப்பதனால் நம் பூர்வ ஜென்ம கர்மாக்கள் அழிக்கப்பட்டு ஆன்மாவானது புனிதமடைந்து மீண்டும் சத்கர்மங்களை செய்து (புனித செயல்களை) மேல்நிலை அடைகிறது! அதுமட்டுமல்லாமல் தான் விரும்புகின்ற இகபர சுகங்களையும் பெற்று ஆனந்தம் பெறுகின்றது! அஹநாதமானது ஸ்மரணை (ஜபம்) செய்யும் ஒவ்வொருவரது வாழ்விலும் அவரவர் விருப்பத்தை நிறைவேற்றும் கல்ப விருட்சமாக அமைந்து விடுகின்றது. சாதகனின் அறிவை நுண்மைப்படுத்தி அவனது தீய கர்மங்களை அழித்து நல்ல கர்மாக்களை புரியவைக்கிறது. அவனது தேவைகளை இயற்கையின் இணக்கத்தோடு பெறுவதற்கு வழிவகுக்கிறது. சாதகனின் சராசரி வாழ்வின் எல்லா பிரச்சினைகளிலும் அறிவு மயமாகவே இருந்து வழிகாட்டி வாழ்வில் எல்லா செல்வங்களும் தங்குதடையின்றி கிடைக்கவும், ஆனந்தமும் அமைதியும் ஏற்பட வழிகாட்டுகிறது! எல்லையற்ற நித்தியானந்தமாகிய அஹநாதத்தை குருமூலம் கிடைக்கும் பீஜாட்சர மந்திர தீட்சை மூலமாக பெறும்போது சத்குரு பெற்றிருக்கும் புனித ஆற்றலை சிஷ்யனுக்கும் தரும் ஒரு இணைப்பாக இது அமைகின்றது! அதாவது பிரபஞ்ச சக்தியிலிருந்து சத்குருவும் அவரிடமிருந்து சிஷ்யனும் நாதத்தின் மஹா சக்தியினால் இணைக்கப்படுகின்றனர்! புனிதமான அஹநாதத்தை ஸ்மரணை (ஜெபித்தல்) செய்யும் போது சூட்சும உடலில் உள்ள ஆறுஆதாரசக்கரங்களும் புனிதம் பெற்று இயங்கத் தொடங்குகின்றன! அஹநாத ஒலியானது தன் ஆற்றல்மிகு அபூர்வ அதிர்வலைகளால் சகஸ்ராரத்தினையும் கடந்து பிரபஞ்ச பேரியக்க சக்தியோடு இணைப்பு பெறுகிறது! இதனால் ஒரு சாதகன் எல்லையற்ற பரம்பொருளுடன் இணைப்பு பெறுவதால் அப்பிரம்மத்தை தன்னில் உணர்கிறான்! பரப்பிரம்மாவாகிய ஆதிநிலைக்கு தன்னை சமமாக்கிக் கொள்ளும் சமாதி நிலைக்கு இறுதியில் கைவல்யம் பெறுகிறான்! அஹநாதத்தை ஸ்மரணை செய்யும் சாதகன் எல்லாவற்றுக்கும் மேலான தெய்வீக நிலையை இறுதியில் அடைகிறான்!! இந்த மேலான அஹநாதத்திலே தான் நம் சித்தர்கள், யோகிகள், மஹரிஷிகள் யாவரும் லயித்திருந்தனர்! அவர்களால் அறிந்து உணர்ந்த புனித வழியே இதுவாகும்! நம் முன்னோர்களான சித்தர்களும், யோகிகளும் மெய்ஞானக்கடலுள் ஆழ்ந்தெடுத்த ஆணிப்பொன் முத்தான இந்த அஹநாத யோகமானது நமக்கு கிடைத்திருக்கும் ஒரு வரப்பிரசாதமாகும்! தன்னை தன்னுள்ளே அறிந்து அங்கு எல்லையற்று ஒலித்துக் கொண்டிருக்கும் அஹநாதத்திலே மூழ்கி பேராற்றலும் பேரானந்தமும் பெற்ற யோகிகள் சித்தர்கள் எல்லோரும் அவர்கள் நினைத்ததை செயல்படுத்தினர்! இந்த உலகிற்கும் இங்கு வாழ்கின்ற உயிரினங்களுக்கும் இயற்கைக்கும் அளப்பரிய சேவை செய்தனர். இந்த மெய்ஞானக் கடலில் நீங்களும் சங்கமித்து எல்லா செல்வங்களும் பெற்று பிறப்பிறப்பற்ற பரிபூரண பரப்பிரம்மசாவதத்தில் இரண்டறக் கலந்து இறைநிலை அடைவீர்களாக!

முமூட்சு

முமூட்சு "இன்னமொன்று சொல்லுகிறேன் முமூட்சுவாக பின்னமென்று வைத்திருக்க கருத்திலாகா கன்னமென்று கருத்தில் வைத்து கருவாய் கேளு கலந்துவிடும் சீவனது சிவத்துடனே................................ ....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................தீர்க்கமுள்ள திடதீர்க்க சீடனே நீதான் திடசித்தனென்று பேர் கொள்ளத்தக்காய் ஆர்க்குமிது கிட்டாது உனக்குமட்டும் தினந்தோறும் மனம் வைத்து காத்து கொண்டாய் பார்க்கையிலும் பார்வையுடன் பதித்துகொண்டாய் பரதேசி கருணையுடன் பறைந்துவிட்டேன் Hseija Ed Rian யோகத்தின் சாலம்ப நிராலம் பந்தான் உரைத்தாரே பெரியோர்க ளிரண்டா மென்றே; ஆகமத்தின் படியாலே சாலம் பந்தான் அநித்யமல்ல நித்தியமென் றறைய லாகும்; சோகத்தைப் போக்கிவிடும் நிராலம் பந்தான்; சூன்யவபிப் பிராயமதே சொரூப முத்தி; மோகசித்த விருத்திகளைச் சுத்தம் பண்ணி மம்மூட்சு பிரமைக்ய மோட்ச மென்னே.22

புள்ளி

புள்ளி  எத்தனைக்கும்பெரியதவம் இறைனாமம் பிஸ்மில்- இதற்குள்ளே அடங்கும் பொருள் எடுத்துரைப்பதரிதே- அந்த பிஸ்மில் முதலான விதமேதால்- அணுப்போல கொண்டபுள்ளி அலிபாக நீண்டே- அந்த புள்ளி அலிபு மறைந்ததொரு பேயாம் - அந்தரத்திலானதினால் அதுநினைவு சிர்றாம்- இந்த சிர்றே மீமாம் இது நாலும் இஸ்மாம்- இது நாலும் அவனாம் இதுவிதம் வேறில்லை -அந்தரத்திலான சிர்றால் அமைந்த மீமுக்குள்ளே -அமைந்தவெளி நூறான பேருமஹ்மூதாம்- இந்த பிஸ்மிலுக்குள் உயிரெழுத்து மூன்று- எல்லா மறைகளுக்கும் மெத்த முள்ளதாமே -அந்தெழுத்தை இன்னதென்று அதனுடைய வளமும் -ஆரும் சொல்லார் சொன்னாலும் ஆரும் அறியாரே -அந்தெழுத்து மூன்றிலொன்று அது தானே தாத்து -அஹதயத்தும் அதுதானே அதிலுமதைபோல -வந்ததுதான் உஹதத்தென்று அமைந்தது சிபாத்து -அதிலுமதைப்போல அமைந்தது வாஹிதியத்தாமே- வாஹிதியாவதென்ன அனைத்தும் முடிந்ததுவாம்- வரமான தவநிலையின் வாழ்த்துக்குயர் மணியாம்- இந்தவகை அறியார்கள் முந்தவகையறியார் -அந்தவகையறியார்கள் அந்தரத்திலாவார் -இந்தவகை அறிந்தவர்கள் எந்தனுக்கும் குருவாம் -இவையறிந்த பேர்களெல்லாம் யாவும் அறிந்தவராம்=(பிஸுமில் குறம்

வானகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி

🌺🌺 வானகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி... 🌺🌺 இறந்தவர் உடல் மண்ணிற்கு தானே செல்கிறது. ஆனால் இறந்தவர் சொர்க்கத்திற்கு போனார் என ஆகாயத்தை காட்டுகிறோமே... 🤔🤔 அப்போ உடல் மண்ணிற்கு போகிறது என்றால் எது விண்ணிற்கு போகிறது..??? மண்ணோடு மண்ணாக போவது ஒன்றும், விண்ணோடு விண்ணாக போவது ஒன்றும் இருக்கனும் தானே.. "நீங்கள் மண்ணில் இருந்து பிறந்தவர்கள். என்னை பிதா அனுப்பியிருக்கிறார். நான் விண்ணில் இருந்து வந்தேன்" என பைபிளில் சொல்லப் பட்டிருப்பதை காணலாம். ஆக, விண்ணில் இருந்து வந்தது ஒன்றும், மண்ணில் இருந்து வந்தது ஒன்றும் இருக்கு என தெளிவாகிறது. ஒன்று பெண் தன்மையாகவும், மற்றொன்று ஆண் தன்மையாகவும் இருக்கிறது. எல்லா ஜீவன்களுக்கும் பூமி தான் தாயாக விளங்குகிறது. தாயின் மடியிலே பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து, மடிந்தும் போகிறோம். அப்போ ஆண் தன்மையாக விளங்குவது விண்ணில் இருந்து தானே வந்திருக்க வேண்டும். "நானும் பிதாவும் ஒன்றாகவே இருக்கிறோம். என்னை அறிந்தவன் என் பிதாவையும் அறிவான்" என பைபிள் சொல்கிறது. விண்ணில் இருந்து பூமிக்கு வருவது ஒரு சுழற்சியும், பூமியில் இருந்து விண்ணிற்கு போவதும் ஒரு சுழற்சியும் இருக்கிறது. இரு தன்மைகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. தாவோயியம் யின் - யாங் கோட்பாடும் இதுவே. இந்த தூல உடலான மண்ணை பிடித்துக் கொண்டு இருந்தால் மண்ணாக தான் போவோம். விண்ணிற்கு போக வேண்டும் எனில் தாயின் மடியில் தவழ்வதை விடுத்து, தந்தையை அறிந்து அதன் வழி பற்ற வேண்டும். தாய் நமக்கு தந்தையை காட்டித் தருவாளா??  நன்றி ஜனனி 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

உயிர்

உயிர் என்பது உலகில் இருக்கும் ஒரு பொருள், அதை அறிவது மாபெரும் பாக்கியமே ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த உயிர் உலகத்தில் வரவேண்டுமெனில் ”இரு” பொருள்கள் ஒன்று சேரவேண்டும். ஆகையினால் “உயிரானது உலகில் வாழ” இரு பொருள்கள் சேர்ந்தால் அல்லாது ”வாழாது”. அதனால் “வாழ்வு” என்பது “இரு பொருள்களின்” சேர்க்கை என்பதில் ஐயமில்லை அன்றோ?. அந்த “இரு பொருள்கள்’ யாதெனில்” தாயும் தந்தையுமே” ஆகும். அதாவது தாயையும் தந்தையையும் அறிந்தவன் உயிர் வாழ்வான், ஏனையவர்கள் செத்தவர்களிடம் சேர்க்கப்படுவார் என்பதில் ஐயம் வேண்டாம், அப்படித்தானே?.ஆகையினால் “தாயையும் தந்தையையும் “ அறிவோமாக. நம்முடைய உடலில் உயிர் இருக்கிறது என்பது நமக்கு தெரிகிறது, ஆனால் அது எங்கிருக்கிறது என தெரியாது, அப்படித்தானே?. ஆகையினால் உயிர் எங்கிருக்கிறது என்பதை அறிய எளிய மார்க்கமானது அது எங்கிருந்து வந்தது என்பதை அறிதலேயாம்.அல்லவா?.அதாவது நமது தாயும் தந்தையும் நமக்கு இரண்டு பொருள்களை தந்துள்ளனர், ஒன்று விந்து , மற்றொன்று நாதம். இவை இரண்டுமே அவர்கள் நமக்காக தந்த மேலாம் பொருள்கள், அல்லவா?. அப்படியாயின் உயிரானது இவ்விரண்டையும் சார்ந்து தானே இருக்கவேண்டும் உயிரானது நமது தந்தையானவர் நமக்கு தந்த ”விந்து” எனும் நிலையத்தில் இருக்கிறது., அது கோடி சூரியபிரகாசத்துடன் இருக்கிறது என்கின்றனர் ஞானிகள். இங்கு ஒரு விஷயம் நாம் கருத்தில் கொள்ளவேண்டியது என்னவென்றால், மேற்சொன்ன “விந்துவும் நாதவும்” ஆண்பெண் இருபாலருக்கும் பொதுவாகவே உள்ளது என்பதாகும்.அதாவது “விந்துவும் நாதவும்” கருப்பையில் சேர்ந்து ஏழு நாட்கள் அவை ஆனாகவோ பெண்னாகவோ அறிவு பிரியாமல் ”இரண்டுமற்ற” தன்மையில் இருக்கும், பிறகு ஆணாகவோ பெண்ணாகவோ அலியாகவோ பிறவி எடுக்கும். ஆண் தன்மை மிகுந்தது ஆனாகவும் பென் தன்மை மிகுந்தது பெண்ணாகவும் இருக்கும். அப்போதும் ஆணிடத்தில் கொஞ்சம் பெண் தன்மையும் , பெண்ணிடத்தில் கொஞ்சம் ஆண் தன்மையும் இருக்கவே இருக்கும். இப்படியான “விந்துவும் நாதவுமே’ “ஒத்த பொருட்கள்”., இவை இல்லையெனில் உயிர் நிலை என்பது உலகத்தில் வராது. எந்த ஒரு உயிரும் உலகத்தில் வந்து முதிர்ச்சி அடைந்தாலும், அந்த உயிரின் அடிப்படை கூறான “ விந்துவும் நாதவும் அவ்வுடம்பில் குடி இருக்கும் ஆன்மாவானது உயிரையோ ,விந்துவையோ நாதத்தையோ அறியாது “நான்’ எனும் அகந்தையினால் அறிவழிந்து கெட்டு மரணத்தை அடைகின்றது. ஆகையினால் அப்படி போகாது உயிர் நிலையை கண்டடைந்து கொள்ளவேண்டின் நாம் “ஒத்த பொருள்களை” கண்டடையவேண்டும். அந்த இரண்டு பொருட்களையும் “அகர உயிர் எனவும் உகர உயிர் எனவும் “ கொளளுவர் ஞானிகள். இவை இரண்டும் “தாய் தந்தை” அணுக்களேயாம், அல்லது “நாத விந்துக்கள்”, அடுத்து இவ்விரண்டின் சேர்க்கையினால் பிறக்கும் உயிரே “ம்” எனும் ஜீவ ஆன்மா. ஆனால், ஜீவான்மாவானது அகர உகர பொருட்களை அரியாது ,தன்னுடைய உயிர் நிலையை அடையாது மரணத்தை அடைவது பரிதாபகரமானது.ஆகையினால் இவ்விரண்டு “ஒத்தபொருட்களை” அறிந்து உயிர் காப்போம், விந்து நிலை தனை அறிந்து விந்தை காண விதமான நாதமது குருவாய் போகும் ,விதமான நாதமது குருவாய் ஆனால் ஆதிஅந்தமான குரு நீயேயாவாய், சந்தேகமே இல்லையடா புலத்தியனே ஐயா சகலகலை ஞானமெல்லாம் இதுக்கொவ்வாது, முந்தாநாள் இருவருமே கூடிச்சேர்ந்த மூலமதை அறியாட்டால் மூலம் பாரே,.....என அகத்தியர் சொன்னதுவே உயர்ஞானம்...வாழ்க குரு “திருவடி, வாழ்க சிவபாதம் கூறும் ஒளி ஒலி தத்துவங்களுக்கு அப்பாலுக்கு அப்பால் இரண்டையும் கடந்து நிற்பதுவே உயிர் தத்துவம்.... ஒளியும் ஒலியும் மனதினால் காணப்படுவதும் கேட்க்கப்படுவதும் ஆம்.... ஆனால் உயிர் அனுபவம் என்பது உயிரானது உயிரினை அறிவதாம்...அதற்க்கு மனம் தேவை இல்லை..... ஆறானது ஒரு இடத்திலிருந்து உற்பத்தியாகி ஒருமுகமாகவோ பலமுகமாகவோ ஓடினும், அதன் உற்பத்தி ஸ்தானத்தை அறிந்துகொள்ள ஆற்றையே அடங்கசெய்யவேண்டும் என நினைப்பது சரியானதாக தோன்றுகிறதா?... அப்படியே மனதின் உற்பத்தி ஸ்தானத்தை அறிந்து கொள்ள மனமானது அடங்கவேண்டுமென்பதில்லை, அறிவு உருவானாலேபோதுமானது... அறிவானதே அந்தகாரனத்தை ஊடுருவும் தன்மை கொண்டது...அறிவானது புத்தி தத்துவத்தை சார்ந்து நில்லாது ஆன்ம தத்துவத்தை சார்ந்து நிற்க்கும்போது உணர்வானது உண்மை விளக்கமாக உயிர் சார்ந்து அனுபவவிளக்கமாகும்...அனுபவ விளக்கமானது உண்டாகுமிடத்து சந்தேகம் என்பது உருவாகது உயிர்பிரகாசம் மட்டுமே மேலோங்கி சுயம்பிரகாசமாயிருக்கும்....எப்போதும் நமக்கு உயிரனுபவம் இல்லாத பொருட்களிடத்தே சந்தேகம் இருந்து கொண்டிருக்கும்..நம் உயிரனுபவத்திற்க்கு வந்த பொருட்கள்மேல் எள்ளளவும் சந்தேகம் என்பது வராது