Tuesday, August 8, 2023

உயிர் என்பது உலகில் இருக்கும் ஒரு பொருள், அதை அறிவது மாபெரும் பாக்கியமே

 உயிர் என்பது உலகில் இருக்கும் ஒரு பொருள், அதை அறிவது மாபெரும் பாக்கியமே ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த உயிர் உலகத்தில் வரவேண்டுமெனில் ”இரு” பொருள்கள் ஒன்று சேரவேண்டும். ஆகையினால் “உயிரானது உலகில் வாழ” இரு பொருள்கள் சேர்ந்தால் அல்லாது ”வாழாது”. அதனால் “வாழ்வு” என்பது “இரு பொருள்களின்” சேர்க்கை என்பதில் ஐயமில்லை அன்றோ?.


அந்த “இரு பொருள்கள்’ யாதெனில்” தாயும் தந்தையுமே” ஆகும். அதாவது தாயையும் தந்தையையும் அறிந்தவன் உயிர் வாழ்வான், ஏனையவர்கள் செத்தவர்களிடம் சேர்க்கப்படுவார் என்பதில் ஐயம் வேண்டாம், அப்படித்தானே?.ஆகையினால் “தாயையும் தந்தையையும் “ அறிவோமாக.



நம்முடைய உடலில் உயிர் இருக்கிறது என்பது நமக்கு தெரிகிறது, ஆனால் அது எங்கிருக்கிறது என தெரியாது, அப்படித்தானே?. ஆகையினால் உயிர் எங்கிருக்கிறது என்பதை அறிய எளிய மார்க்கமானது அது எங்கிருந்து வந்தது என்பதை அறிதலேயாம்.அல்லவா?.அதாவது நமது தாயும் தந்தையும் நமக்கு இரண்டு பொருள்களை தந்துள்ளனர், ஒன்று விந்து , மற்றொன்று நாதம். இவை இரண்டுமே அவர்கள் நமக்காக தந்த மேலாம் பொருள்கள், அல்லவா?. அப்படியாயின் உயிரானது இவ்விரண்டையும் சார்ந்து தானே இருக்கவேண்டும்


உயிரானது நமது தந்தையானவர் நமக்கு தந்த ”விந்து” எனும் நிலையத்தில் இருக்கிறது., அது கோடி சூரியபிரகாசத்துடன் இருக்கிறது என்கின்றனர் ஞானிகள். இங்கு ஒரு விஷயம் நாம் கருத்தில் கொள்ளவேண்டியது என்னவென்றால், மேற்சொன்ன “விந்துவும் நாதவும்” ஆண்பெண் இருபாலருக்கும் பொதுவாகவே உள்ளது என்பதாகும்.அதாவது “விந்துவும் நாதவும்” கருப்பையில் சேர்ந்து ஏழு நாட்கள் அவை ஆனாகவோ பெண்னாகவோ அறிவு பிரியாமல் ”இரண்டுமற்ற” தன்மையில் இருக்கும், பிறகு ஆணாகவோ பெண்ணாகவோ அலியாகவோ பிறவி எடுக்கும்.
ஆண் தன்மை மிகுந்தது ஆனாகவும் பென் தன்மை மிகுந்தது பெண்ணாகவும் இருக்கும். அப்போதும் ஆணிடத்தில் கொஞ்சம் பெண் தன்மையும் , பெண்ணிடத்தில் கொஞ்சம் ஆண் தன்மையும் இருக்கவே இருக்கும்.

இப்படியான “விந்துவும் நாதவுமே’ “ஒத்த பொருட்கள்”., இவை இல்லையெனில் உயிர் நிலை என்பது உலகத்தில் வராது. எந்த ஒரு உயிரும் உலகத்தில் வந்து முதிர்ச்சி அடைந்தாலும், அந்த உயிரின் அடிப்படை கூறான “ விந்துவும் நாதவும்

அவ்வுடம்பில் குடி இருக்கும் ஆன்மாவானது உயிரையோ ,விந்துவையோ நாதத்தையோ அறியாது “நான்’ எனும் அகந்தையினால் அறிவழிந்து கெட்டு மரணத்தை அடைகின்றது. ஆகையினால் அப்படி போகாது உயி நிலையை கண்டடைந்து கொள்ளவேண்டின் நாம் “ஒத்த பொருள்களை” கண்டடையவேண்டும். அந்த இரண்டு பொருட்களையும் “அகர உயிர் எனவும் உகர உயிர் எனவும் “ கொளளுவர் ஞானிகள். இவை இரண்டும் “தாய் தந்தை” அணுக்களேயாம், அல்லது “நாத விந்துக்கள்”, அடுத்து இவ்விரண்டின் சேர்க்கையினால் பிறக்கும் உயிரே “ம்” எனும் ஜீவ ஆன்மா.

ஆனால், ஜீவான்மாவானது அகர உகர பொருட்களை அரியாது ,தன்னுடைய உயிர் நிலையை அடையாது மரணத்தை அடைவது பரிதாபகரமானது.ஆகையினால் இவ்விரண்டு “ஒத்தபொருட்களை” அறிந்து உயிர் காப்போம்,

விந்து நிலை தனை அறிந்து விந்தை காண விதமான நாதமது குருவாய் போகும் ,விதமான நாதமது குருவாய் ஆனால் ஆதிஅந்தமான குரு நீயேயாவாய், சந்தேகமே இல்லையடா புலத்தியனே ஐயா சகலகலை ஞானமெல்லாம் இதுக்கொவ்வாது, முந்தாநாள் இருவருமே கூடிச்சேர்ந்த மூலமதை அறியாட்டால் மூலம் பாரே,.....என அகத்தியர் சொன்னதுவே உயர்ஞானம்...வாழ்க குரு “திருவடி, வாழ்க சிவபாதம்

கூறும் ஒளி ஒலி தத்துவங்களுக்கு அப்பாலுக்கு அப்பால் இரண்டையும் கடந்து நிற்பதுவே உயிர் தத்துவம்.... ஒளியும் ஒலியும் மனதினால் காணப்படுவதும் கேட்க்கப்படுவதும் ஆம்.... ஆனால் உயிர் அனுபவம் என்பது உயிரானது உயிரினை அறிவதாம்...அதற்க்கு மனம் தேவை இல்லை.....

ஆறானது ஒரு இடத்திலிருந்து உற்பத்தியாகி ஒருமுகமாகவோ பலமுகமாகவோ ஓடினும், அதன் உற்பத்தி ஸ்தானத்தை அறிந்துகொள்ள ஆற்றையே அடங்கசெய்யவேண்டும் என நினைப்பது சரியானதாக தோன்றுகிறதா?... அப்படியே மனதின் உற்பத்தி ஸ்தானத்தை அறிந்து கொள்ள மனமானது அடங்கவேண்டுமென்பதில்லை, அறிவு உருவானாலேபோதுமானது... அறிவானதே அந்தகாரனத்தை ஊடுருவும் தன்மை கொண்டது...அறிவானது புத்தி தத்துவத்தை சார்ந்து நில்லாது ஆன்ம தத்துவத்தை சார்ந்து நிற்க்கும்போது உணர்வானது உண்மை விளக்கமாக உயிர் சார்ந்து அனுபவவிளக்கமாகும்...அனுபவ விளக்கமானது உண்டாகுமிடத்து சந்தேகம் என்பது உருவாகது உயிர்பிரகாசம் மட்டுமே மேலோங்கி சுயம்பிரகாசமாயிருக்கும்....எப்போதும் நமக்கு உயிரனுபவம் இல்லாத பொருட்களிடத்தே சந்தேகம் இருந்து கொண்டிருக்கும்..நம் உயிரனுபவத்திற்க்கு வந்த பொருட்கள்மேல் எள்ளளவும் சந்தேகம் என்பது வராது

இருதயம்

 ====இருதயம்====


கடவுள் என்ற தத்துவப் பொருள் இருக்கும் இடம், அனைத்து மத வேதங்களிலும் ஒரே மாதிரியாகக் கூறப்பட்டிருந்தாலும் மதப் பிண்ணணி கொண்ட மடங்கள் இதற்கு மாற்றுக் கருத்தைத்தான் இன்று நடைமுறைப்படுத்தி வருகிறது.

*சைவமதம் ஈசன் "இருப்பிடம"் இருதயம்* என்றும்

*வைணவம் "இருதய கமலவாசன்" என்றும்

*கிருத்துவம் புனித "இருதயம்" என்றும்

*இஸ்லாம் கல்பென்ற "இருதயத்தில்" அல்லா உள்ளான்* என்றும்

ஒத்த கருத்துக் கொண்டிருந்தாலும் வேதத்தில் பயிற்சியும் பாண்டித்யமும் பெற்ற இன்றைய ஆன்மீக சிந்தனாவாதிகள் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது அவர்கள் நடத்தையாகிய பிற மத சகிப்புத்தன்மை இல்லாத ஒன்றினால் வெளிப்படுகிறது.
காரணம் இங்கே "இருதயம்" என்ற ஒரு சொல்லுக்கு பொருள் அறியா காரணத்தால் அறிவில் பேதமாகி அது தேகத்தில்முடிவடைகிறது. உயிர்நிலை என்ற உயர்ந்த ஞானம் வேதத்தை வார்த்தையாகக் கற்றுணர்ந்தவர்களுக்கு
புரியாத அறியாமையால் இது நிகழ்கிறது.

*இருதய இடத்தை அறியும் வினையே மனிதகுலம் ஆற்றவேண்டிய பணியாகும்.*

சொல் பிறந்த இடம் எங்கே?
முப்பாழ் எங்கே?
துவார பாலகர் எங்கே?
நல்ல சங்கு நதி எங்கே?
வைகுண்டம் எங்கே?
நாரணன் ஆழ் இலை மேல் படுத்தது எங்கே?
அல்லல்படும் ஐம்பூத ஒடுக்கம் எங்கே?
ஆறுஐந்து இதழ் இரண்டும் முளைத்தது எங்கே?
சொல்ல வல்லார் உண்டானால் அவரை
நாமும் தொழுது வணங்கி குருவென பணிந்து
வழங்கல் ஆமே

குருவே சரணம்.

-- ❤திரு. ரியான் ஐயா அவர்கள்❤

ஒத்த பொருள் யாது?

ஒத்த பொருள் யாது?

 அன்பார்ந்த சன்மார்க்க சாதகர்களே, ஆன்மீக மார்க்கத்தில் பிரயாணம் பண்ணும் சாதகர்கள் முக்கியமாக அற்ந்து கொள்ளவேண்டியது “ஒத்த பொருள்’ என குறிப்பிட்டுள்ள மறை ரகசியத்தையே. அதென்னது ஒத்த பொருள் என கேள்வி எழும்புவது சஹஜமே, ஏனெனில் ஒவ்வொருவரும் ஒருவாறு விளக்கம் சொல்லுவார்கள், ஆனால் ஒத்தது அறிந்தவர் ஒருசிலரே.அதனாலேயே ‘ஒத்தது அறிந்தார் உயிர் வாழ்வர் மற்றெல்லாம் செத்தாருள் வைக்கப்பெடும்” என்றனர் ஞானிகள். உயிர் என்பது உலகில் இருக்கும் ஒரு பொருள், அதை அறிவது மாபெரும் பாக்கியமே ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த உயிர் உலகத்தில் வரவேண்டுமெனில் ”இரு” பொருள்கள் ஒன்று சேரவேண்டும். ஆகையினால் “உயிரானது உலகில் வாழ” இரு பொருள்கள் சேர்ந்தால் அல்லாது ”வாழாது”. அதனால் “வாழ்வு” என்பது “இரு பொருள்களின்” சேர்க்கை என்பரன்ஐயமில்லை அன்றோ?. அந்த “இரு பொருள்கள்’ யாதெனில்” தாயும் தந்தையுமே” ஆகும். அதாவது தாயையும் தந்தையையும் அறிந்தவன் உயிர் வாழ்வான், ஏனையவர்கள் செத்தவர்களிடம் சேர்க்கப்படுவார் என்பதில் ஐயம் வேண்டாம், அப்படித்தானே?ஆகையினால் “தாயையும் தந்தையையும்“ அறிவோமாக. நம்முடைய உடலில் உயிர் இருக்கிறது என்பது நமக்கு தெரிகிறது, ஆனால் அது எங்கிருக்கிறது என தெரியாது, அப்படித்தானே?. ஆகையினால் உயிர் எங்கிருக்கிறது என்பதை அறிய எளிய மார்க்கமானது அது எங்கிருந்து வந்தது என்பதை அறிதலேயாம்.அல்லவா?.அதாவது நமது தாயும் தந்தையும் நமக்கு இரண்டு பொருள்களை தந்துள்ளனர்,ஒன்று விந்து , மற்றொன்று நாதம். இவை இரண்டுமே அவர்கள் நமக்காக தந்த மேலாம் பொருள்கள்,அல்லவா?.அப்படியாயின் உயிரானது இவ்விரண்டையும் சார்ந்து தானே இருக்கவேண்டும்?.. ஆம், அதுவே உண்மை, உயிரானது நமது தந்தையானவர் நமக்கு தந்த” விந்து” எனும் நிலையத்தில் இருக்கிறது., அது கோடி சூரியபிரகாசத்துடன் இருக்கிறது என்கின்றனர் ஞானிகள். இங்கு ஒரு விஷயம் நாம் கருத்தில் கொள்ளவேண்டியது என்னவென்றால், மேற்சொன்ன “விந்துவும் நாதவும்” ஆண்பெண் இருபாலருக்கும் பொதுவாகவே உள்ளது என்பதாகும்.அதாவது “விந்துவும் நாதவும்” கருப்பையில் சேர்ந்து ஏழு நாட்கள் அவை ஆனாகவோ பெண்னாகவோ அறிவு பிரியாமல் ”இரண்டுமற்ற” தன்மையில் இருக்கும், பிறகு ஆணாகவோ பெண்ணாகவோ அலியாகவோ பிறவி எடுக்கும். ஆண் தன்மை மிகுந்தது ஆனாகவும் பென் தன்மை மிகுந்தது பெண்ணாகவும் இருக்கும். அப்போதும் ஆணிடத்தில் கொஞ்சம் பெண் தன்மையும் , பெண்ணிடத்தில் கொஞ்சம் ஆண் தன்மையும் இருக்கவே இருக்கும். இப்படியான “விந்துவும் நாதவுமே’ “ஒத்த பொருட்கள்”., இவை இல்லையெனில் உயிர் நிலை என்பது உலகத்தில் வராது. எந்த ஒரு உயிரும் உலகத்தில் வந்து முதிர்ச்சி அடைந்தாலும், அந்த உயிரின் அடிப்படை கூறான “ விந்துவும் நாதவும்” அவ்வுடம்பில் சிரசினில் இருக்கும்.அதில் உயிர் நிலையானது ஆணாகில் விந்துவுடனும், பெண்ணாகில் நாதமுடனும் இசைந்து இருக்கும்.. ஆனால் ,அவ்வுடம்பில் குடி இருக்கும் ஆன்மாவானது உயிரையோ, விந்துவையோ நாதத்தையோ அறியாது “நான்’ எனும் அகந்தையினால் அறிவழிந்து கெட்டு மரணத்தை அடைகின்றது. ஆகையினால் அப்படி போகாது உயி நிலையை கண்டடைந்து கொள்ளவேண்டின் நாம் “ஒத்த பொருள்களை” கண்டடையவேண்டும். அந்த இரண்டு பொருட்களையும் “அகர உயிர் எனவும் உகர உயிர் எனவும் “ கொளளுவர் ஞானிகள். இவை இரண்டும் “தாய் தந்தை” அணுக்களேயாம், அல்லது “நாத விந்துக்கள்”, அடுத்து இவ்விரண்டின் சேர்க்கையினால் பிறக்கும் உயிரே “ம்” எனும் ஜீவ ஆன்மா. ஆனால், ஜீவான்மாவானது அகர உகர பொருட்களை அரியாது ,தன்னுடைய உயிர் நிலையை அடையாது மரணத்தை அடைவது பரிதாபகரமானது. ஆகையினால் இவ்விரண்டு “ஒத்தபொருட்களை” அறிந்து உயிர் காப்போம், குழூஉக்குறியாக இவற்றை “பிச்சி மொட்டாகவும்”, எலுமிச்சை பழமாகவும் உருக்கொள்வார்கள். ஏனெனில், பிச்சி மொட்டானது விந்தணுவின் பரியாயமாகவும், எலுமிச்சை பழமானது சுரோனிதத்தின் பரியாயமாகவும் சொல்லுவர் ஞானிகள். இவற்ரையே “குரு தட்சிணையாக” கொள்ளுவது “குரு மரபு”.விந்து நிலை தனை அறிந்து விந்தை காண விதமான நாதமது குருவாய் போகும் ,விதமான நாதமது குருவாய் ஆனால் ஆதிஅந்தமான குரு நீயேயாவாய், சந்தேகமே இல்லையடா புலத்தியனே ஐயா சகலகலை ஞானமெல்லாம் இதுக்கொவ்வாது, முந்தாநாள் இருவருமே கூடிச்சேர்ந்த மூலமதை அறியாட்டால் மூலம் பாரே,..... என அகத்தியர் சொன்னதுவே உயர்ஞானம்... வாழ்க குரு “திருவடி, வாழ்க சிவபாதம்” விஜயகுமார் சு அன்னையும் பிதாவுமாய் முன் தோன்றும் அகரதெய்வம்.பின் தோன்றும் அன்னைபிதா பிறந்திற(ரு)க்கும் பேதையராம


 Hseija Ed Rian ”உண்மையில் தகப்பன் ஒரு பகுதியாகவு ம் தாய் ஒரு பகுதியாக இருந்தாலும்” என்று ஏற்றுகொள்ளுதலில் இரண்டு பேர் இருக்கிறார்கள். இளம் கருவில் மட்டுமே சொல்லப்பட்ட 10 வயதான கன்னியின் தேவை வருகிறது, இந்த உடலை வளர்ப்பதற்க்கு., அது சரியே, அவளே மகர வாலை. அவளெ ஒத்தவள். யாருக்கு என்றால் சிவத்துக்கு . வள்ளலார் சொல்லுவதை போன்று “கருணையும் சிவமே பொருளென கொள்ளும் காட்ச்சியும் பெறுக” . இங்கு கருணையாக மனிதறுக்குள் இருப்பதே அந்த வாலை. அவளே சிவமென கொள்ளுதல் வேண்டும். ஆதலால் சிவத்துக்கு “ஒத்ததே” ..அதாவது சிவ பொருளே. அந்த வாலையோ ஆண் பாதி பெண்பாதியாகவே உள்ளாள். “...முன்னாலே பாத்தால் பெண்போலே ரூபம் பின்னாலே பாத்தால் புருஷ ரூபம்... அய்யய்யோ அவளாடும் ஆட்டமதை கானப்போகா...” என்பர் சித்தர் பெருமக்கள். 

Hseija Ed Rian இந்த உலகத்தில் “உயிர்’ என்பது தாவரங்களை சார்ந்தே நிலை கொண்டுள்லது, இவ்வுலகினில் தாவரங்கள் இல்லையெனில் ஏனைய உயிர் கலாங்கள் உயிர் வாழ முடியாது, இறைவன் இவற்ரிற்க்கு உண்வாக தாவரங்களையே முதன்முதலாக படைத்து அருளி உள்ளான். அன்று தாவர தோற்றம் முந்தி விளைந்து, உயிர்காற்று எனும் அமிர்த காற்றினை உலக ஆகாயத்தில் விரிவுபடசெய்தது, தாவர உயிர்களே உலகில் முதலில் மழையினை அருளிசெய்தன என்பதும் இயற்கை உண்மை.நாம் காணும் ஒவ்வொரு புல்லும் உலகிற்க்கு உயிர் காற்றையும் மழைதுளியையும் உற்பத்திசெய்துகொண்டே இருக்கின்றன என்பது கண்ணுற்று நோக்கவேண்டியது ஆகும் அல்லவா?.. 


Hseija Ed Rian இவ்வுலகில் உயிர் வாழ”தனியாக” இயலாத மனித விலங்கு புழு பூச்சி இனங்களுக்கு “உயிர் துணை”யாகவே தாவரங்கள் விளங்குகின்றன என்பதும் இயற்கை உண்மை. அப்படி இருக்க ஏனைய உயிர்க்கு முன்னின்று விளங்குவது தாவர உயிர் எனும் அதிசயமே, அதுவே அதிசயத்திலும் அதிசயமானது. அதன் அதிசயம் என்பது கடவுளின் “முதல் பிள்ளை” என்பதாகும்.கடவுள் இவ்வுலகில் படைத்த “முதல் உயிர் பிள்ளை” தாவர படைப்புகளே என்பதும் இயற்கை உண்மை அல்லவா?. 


Hseija Ed Rian தாவரங்களுக்கு “ஆன்மா” இல்லை என்பது ஒரு மறைபொருல். அவற்றிற்க்கு “ நான்” எனும் போதம் இருப்பதில்லை. உயிர் இருக்கும் ஆனால் ஆன்ம அறிவு இருக்காது.... இது பரம ரகசியமான ஒரு விஷயம்.. 


Hseija Ed Rian சொல்லி சொல்லி நாம் இப்போது சொல்லக்கூடாத “ ஜீவ விருட்சத்தின் விருட்சத்தின்” மறை ரகசியங்களை நோக்கி பிரயானம் பண்ணுகிறோம் என்பது நான் அறிந்தே பேசுகிறேன். சாலை ஆண்டவர் ஜீவனுக்கும் மரங்களுக்கும் உள்ள தொடர்பினை “ஒரு்வாறு” சொல்லி உள்ளார்..அதற்க்குமேல் சொல்லவில்லை, ஏன் சொல்லவில்லை என இங்கு சொல்லதேவை இல்லை. ஆனால் உயிர் இனங்கள் மரனத்துக்கு பின் மரங்களின் வேர் முகாந்திரம் அடுத்த பிறவிக்கு தக்க உடலில் வருகின்றன என “ஒருவாறு” சொல்லியுள்ளார். ஆனால் “ஆதி அவத்தை” என்ன என அவர் சொல்லவும் இல்லை விளக்கவும் இல்லை....இந்த உலகத்துக்கு “உயிர் வந்த வழி” எது என அவர் சொன்னதாக கேட்டதில்லை....கடைசியில் வரக்கூடிய “ஜீவ பிரயாணத்தை” மட்டுமே அவர் சொல்லுகிறார், ஆனால் “ஜீவ வரவு” எப்படி என சொல்லவில்லை.... வரவு எப்படி என அற்ந்தால் மட்டுமே”போக்கு” எப்படி என அறிய முடியும்.... அல்லாதவர்கள்.... ”இருப்பு” எனும் நிலையில் மண்ணறையில் “இருப்பார்கள்”..... வரவு அறிந்த பின் போக்கு அறிவாகும், அதுவரைக்கும் இருப்பு தான்.,,அதாவது சமாதி தான். 


Hseija Ed Rian “தாவர சங்கமத்துள்” என வாசகத்தில் சொல்லுவது கொஞ்சம் ரகசியமானது தான்

Wednesday, February 8, 2023

கடவுளின் பார்வையில்

 உலகத்தில் பசி பஞ்சம் பட்டினி அடக்குமுறை கொடுமை வறுமை கொலை கொள்ளை நோய் இயற்கையின் தாண்டவம் என நெஞ்சை உருக்கும் நிகழ்வுகள் நடக்கும் சமயங்களில் பலபேரும் கேட்க்கும் ஒரு கேள்வி, கடவுள் ஏன் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு வெறுமனே உள்ளார் என்பதாகும்.

உண்மையில் கடவுள் இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு உள்ளாரா? பார்த்துகொண்டு உள்ளார் எனில் அவர் ஏன் இவற்றை தடுக்கவில்லை அல்லது உதவவில்லை என சிந்தனை செய்யாதவர் இருக்க முடியாது என தோன்றுகிறது.நாத்திகர்கள் இதை சுட்டிக்காட்டி கடவுளை ஏளனம் செய்வதையும் பார்க்கிறோம். உன் கடவுள் வல்லமை படைத்தவன் எனில் ஏன் உன்னை காப்பாற்ற வரவில்லை என ஏளனம் செய்யும்போது பதில் சொல்ல முடியாமல் தவித்து போகின்றோம் அல்லவா?

கடவுள் கண்கள் இல்லாமலேயே அனைத்தையும் பார்க்கின்றவன்,காதுகள் இல்லாமலேயே அனைத்தையும் கேட்கின்றவன்,அளப்பரிய வல்லமை உடையவன் மிகப்பெரிய கருணை உடையவன் என்றெல்லாம் சொல்வதெல்லாம் புளுகு மூட்டையா?

ஆம். கடவுள் இவையனைத்தும் கொண்டவன் தான்.ஆனால் அவன் இவற்றை செய்வதில்லை.ஏனெனின் அவனுக்கு மனம் எனும் பொருள் இல்லை.மனம் உடையவனே செயல் உடையவன்.மனம் கொண்ட நாம் அந்த மனதை கொண்டு இவற்றை நிர்ணயிக்கிறோம்,அளவிடுகிறோம்,கட்டளை படுத்துகிறோம்.இறைவன் இவ்வண்ணம் நிர்ணயிப்பதில்லை அளப்பதில்லை கட்டளையிடுவதுமில்லை.அப்படி அவர் செயலாற்ற துணிந்தாரெனில் அவரும் மனோவயத்தவர் என வரையறைக்கும் வந்துவிடுவார்.மனோவயத்தவருக்கு இன்ப துன்பங்கள் பாவபுண்ணியங்கள் என வினைப்பயன் அமைந்துவிடும்.இவை வாழ்க்கை எனும் சம்சாரத்தின் அங்கம்.இறைவனுக்கு இவை ஒன்றுமில்லை.ஆகையினால் அவன் இவற்றில் இருந்து முற்றிலும் அன்னியன்.இந்த உலகம் அவனுக்கு முற்றிலும் அன்னியம்.இந்த உலகம் அவனுக்கு தேவையில்லாதது.தேவையில்லாத ஒன்றை யார் தான் சுமந்து கொண்டிருப்பர்?. உலகத்துக்குத்தான் அவன் தேவையே தவிர உலகம் அவனுக்கு தேவையில்லை.



Friday, January 20, 2023

கடவுளின் பெயர் என்ன?

 உன்னை பெற்ற தாய் தந்தையர் உனக்கு ஒரு பெயர் வைக்கவில்லை என்றால் உனக்கு பெயர் இருக்குமா என்ன? பெயர் இல்லாமல் வாழ முடியாதா என்ன? இவ்வளவோ பெரிய உலகில் மனிதனை தவிர ஏனய உயிரினங்கள் எல்லாம் தான் எந்தவொரு தனித்துவமான பெயருமின்றி வாழ்ந்து வருகின்றனவே அல்லவா? பெயரென்பது வெறும் வியவகார வழங்கு பொருளன்றி மற்றொன்றன்று.இயற்கையில் எந்தவொரு உயிரினத்துக்கும் தனியென ஒரு பெயரில்லை,சர்வ வல்லவரான இறைவனுக்கும் தான் இது பொருந்தும். தனிப்பட்ட ஒரு பெயரை கொண்டவர் தான் எம் இறைவன் என சொன்னால் உம் இறைவன் பொய்.நாமரூப மன கற்பனைகளை கடந்தவனை உன் வசதிக்கு என பொய் பெயர் புனைந்து மெய்யென பேசித் திரிகின்றாய்.

Friday, December 30, 2022

தேடுதல்

 முல்லா நஸ்ருதீன் இரண்டு மணி நேரமாக தேடிக்கொண்டிருக்கிறார். கையில் ஒரு சிம்னி விளக்கு வேறு அரேபிய பாலைவனக் காற்றில் அங்குமிங்கும் அசைந்தாடி அணைவதும் ஒளிர்வதுமாக இருந்து கொண்டிருந்தது.

 "என்ன முல்லா ரெம்ப நேரமாக தேடிக்கொண்டிருக்கிறீர்களே?"வழிபோக்கர் ஒருவர் வினவினார்;

"என்னுடைய பொக்கிஷம் தொலைந்து விட்டது, அதைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்" என சொல்லிக்கொண்டே விளக்கின் பிரகாசம் எட்டும் இடம் வரை தன் தேடுதலை முல்லா தொடர்ந்தார். நண்பரான அந்த வழிபோக்கரும் முல்லாவுக்கு உதவியாக அவர் கூட சேர்ந்து தேட ஆரம்பித்தார்.

இவர்கள் தேடுவதை கண்டு மற்று சிலர் கூட வந்து சேர்ந்து கொண்டனர். அந்த சின்ன மங்கலான வெளிச்சத்தில் எல்லோரும் சேர்ந்து நீண்ட நேரம் தேடியும் முல்லாவின் பொக்கிஷம் கிடைத்த பாடில்லை.

அதில் ஒருவர் சற்று புத்தியுள்ளவர், அவர் வினவினார் "முல்லா இவ்வளவு தேடியும் பொக்கிஷம் கிடைக்கவில்லையே, நீங்கள் எப்போது தொலைத்தீர்கள்?".

"அது ஞாபகம் இல்லை" முல்லா பதிலளித்தார்.

"இங்கே தான் தொலைத்தீர்களா?" நண்பர் விடுவதாக இல்லை.

"எங்கே தொலைத்தேன் என்பதுவும் சரியாக எனக்கு ஞாபகம் வரவில்லை" அப்பாவியாக முல்லா பதிலளித்தார்.

கடுப்பாகி போன நண்பர் சற்று குரல் உயர்த்தி கேட்டு விட்டார், "முட்டாள் முல்லாவே ,எங்கேயோ எப்போதோ தொலைத்த பொருளை இப்போது இங்கே தேடுகின்றீர்களே, அது இங்கே கிடைக்குமா? எவ்வளவு நேரமாக நாங்களும் சேர்ந்து உங்கள் கூட தேடுகின்றோம்"

சாந்தமாக முல்லா சொன்னார்,"இங்கே தான் வெளிச்சம் இருக்கின்றது அதனால் தான் இங்கே என் பொக்கிஷத்தை தேடுகின்றேன்".

[எங்கேயோ தொலைத்த ஆன்மாவை இங்கே தேடுகின்றோம் ,முல்லா நஸ்ருதீனைப் போல.....]

Sunday, December 25, 2022

லா அலா நூர்

 அந்த நாளையில் அஹமதை துதிக்கும் முன் இறையோன்_விந்தை ஆகிய லாமலிபு ஆனதை விரும்பி_சிந்தையுள் எழு மஹமூதை படைத்தனன் செல்வம்_வந்தவாறதை கண்டே ஞானப்பூட்டினில் வகுப்பாம்~பீரு முஹம்மது றபியுல்லாஹ்.

ஆதியில் இறைவன் வானத்தையும் பூமியையும் படைத்தான்...பின்னர் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார் வெளிச்சம் உண்டாயிற்று~ பைபிள்.

ஆதியில் அல்லாஹ் தன்னிலிருந்து தன்னுடைய நூரை வெளியாக்கினான் அந்த நூரில் இருந்து முஹம்மதை படைத்தான்~அல் குறான்.

நானே மெய்யான ஒளி .என்னை ஏற்றுக் கொள்ளுகிறவன் என் பிதாவை ஏற்றுக் கொள்ளுகிறான்.நான் என் பிதாவில் இருந்து வருகின்றேன்~ யோவான் எழுதிய சுவிசேஷம்.

Thursday, December 22, 2022

Who am I ?

 இந்த ஆன்மீக பயணத்துக்கு வந்து விட்டாலே முதலில் சொல்லி கொடுக்கப்படும் விஷயம் என்பது இது ஒன்று தான். வந்து வந்து போன மாமஹரிஷிகள் என அழைக்கப்பட்டவர்கள் பெரிய ஞானம் என வைத்து விட்டு போன கேள்வி இது.இதைப்போல ஒரு பைத்தியக்காரத்தனம் உலகில் வேறெதுவும் இல்லை எனலாம்.நான் யார் என கேட்டு தியானம் செய்து கொண்டிருந்தால் ஞானம் வந்து விடுமாம்.இதை நம்பி பைத்தியக்காரத்தனமாக அலைந்தது எத்தனை காலம்.தானும் கெட்டு தன்னை நாடி வந்தவனையும் கெடுத்து குட்டிச்சுவரானது தான் பலன்.இதனால் ஒரு ஞானமும் ஒரு காலத்திலும் விளையப்போவதில்லை என்பதே நிஜம். நான் யார் என தியானிக்கும் ஒவ்வொருவனும் உண்மையை அறிந்து கொள்ளப்போவதில்லை.ஏனெனில் நான் யார் என கேள்வி கேட்பவன் உண்மையில் நான் என ஒன்று இருக்கிறதா இல்லையா எனக்கூட நிச்சயமாக தெரிந்து கொள்ளாமல் கேட்கும் கேள்வியானது சரியா தவறா எனக்கூட புரிந்து கொள்ளாமல் வாழ்நாள் முழுவதும் இந்த கேள்வி கேட்டுக்கொண்டே மாண்டு போகின்றான்.

நான் யார் என தியானிப்பவன் உண்மையில் நான் என ஒரு பொருள் இருப்பதாக எந்த சந்தேகமும் இன்றி முதலில் ஏற்றுக்கொள்கின்றான்.இருக்கிறதா இல்லையா என யோசிக்கிறவனுக்கு புத்தி வேலை செய்ய ஆரம்பிக்கிறது.இது இல்லாதவனுக்கு புத்தி மந்தம் ஆனதினால் அவன் நேரடியாக நான் யார் என ஆரம்பித்து விடுகின்றான்.

தன்னை அறிவதே தலையாய தவம் என இவனுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டிருக்க இவன் சுற்றுமுற்றும் பாராமல் முதலிலேயே தன்னை அறிய முற்படுகின்றான்.தன்னை அறிய தன் தலைவனை அறியலாம் என மேலும் இவனுக்கு ஊக்க மருந்து வேறு ஊட்டப்பட்டிருக்கின்றது.போதை கொண்டவன் பைத்தியத்துக்கு சமம்.

Thursday, December 8, 2022

எழுத்து

எழுத்து கேள்வி: ஐயா ஆய்த எழுத்து என்பதனை எப்படி உச்சரிக்கவேண்டும்?...”அக்” என்றா அல்லது ”அஹ்” என்றா....அதாவது அஃறிணை என்பதனை. ”அக்றிணை” என்று உச்சரிக்கவேண்டுமா அல்லது ”அஹ்றிணை” என உச்சரிக்கவேண்டுமா?.. தயவு கூர்ந்து ஒலி இலக்கண விரிவுரை தருக. பதில்: ஆய்த எழுத்து "காரணப்பெயரின் தோற்றம்.... தமிழில் ஆய்த எழுத்தாக ‘ஃ’ உள்ளது. அது எப்பொழுது தோன்றியது? அதற்கு ஏன் ஆய்த எழுத்து என்று பெயர் வந்தது? உலகில் பேச்சு மொழி முதலில் தோன்றி, பின்னர் எழுத்து மொழி தோன்றியது. அதாவது, ஒலிவடிவ எழுத்து தோன்றிய பின்னரே வரிவடிவ எழுத்து தோன்றியது. ‘அ’ என்று எழுத்தொலியை எழுப்பினால் அஃது ஒலி வடிவ எழுத்து.  ‘அ’ என எழுதினால் அது வரிவடிவ எழுத்து.  காதால் கேட்பது ஒலிவடிவ எழுத்து. கண்ணால் காண்பது வரிவடிவ எழுத்து. வரிவடிவ எழுத்துகள் அறிஞர் பெருமக்களால் கால இடைவெளியில் உருமாற்றம் பெற்று வருகின்றன.  ஆய்த எழுத்து தொல்காப்பியர் காலத்திலிருந்தே உள்ளது. இந்த ஆய்த எழுத்தைத் தனி நிலை, முப்புள்ளி, முப்பாற்புள்ளி, அஃகேனம் முதலிய பெயர்களால் குறிப்பிடுகின்றனர். உயிரெழுத்தும் இல்லாமல், மெய்யெழுத்தும் இல்லாமல், உயிர்மெய் எழுத்தும் இல்லாமல் தனித்த நிலையைப் பெற்று, தனித்து நின்று, தனியொரு எழுத்தாக இருப்பதால் தனிநிலை எனப்படுகிறது. இந்த ஓர் எழுத்து மட்டுமே மூன்று புள்ளிகளாலான எழுத்தாக அமைந்துள்ளது. ஆதலால் இவ்வெழுத்து முப்புள்ளி, முப்பாற்புள்ளி எனப் பெயர் பெற்றுள்ளது.  ஓசையின் அடிப்படையில் அஃகேனம் என பெயர் பெற்றுள்ளது. வழக்காற்றில் இதை ‘ஆய்த’ எழுத்து என்றே கூறுவர். ‘ஆய்த’ எழுத்து என இலக்கண நூலார் கூறுவதில்லை. பத்து வகைச் சார்பெழுத்துகளில் ஒன்றாகவே ஆய்த எழுத்து, கூறப்பட்டுள்ளது. இயல்பாக அரை மாத்திரை ஒலியளவு பெறும் ஆய்த எழுத்து, ஓசை குறைந்து கால் மாத்திரை யாக ஒலிக்கும் பொழுது, ஆய்தக் குறுக்கம் என்ற சார்பெழுத்து ஆகிறது. ஆய்த எழுத்து தனிக்குறிலை (தனிக்குற்றெழுத்தை) அடுத்தும், வல்லின உயிர்மெய் எழுத்துக்கு முன்பும் எஃது, அஃது என்பன போன்று வரும். கஃaது (கல் + தீது), முஃடீது (முள் + தீது) என ஆய்தக் குறுக்கமாகி, சார்பெழுத்தாக வரும்பொழுதும் தனிக்குறிலை அடுத்தும் வல்லின உயிர்மெய் எழுத்துக்கு முன்னருமே வரும். ஆய்தம் என்பது பொதுவாக, கருவி எனப் பொருள்படும். ஆயினும், போர்க் கருவிகளையே ஆய்தம் அல்லது ஆயுதம் என்றனர். போர்க் கருவிகளிலும் குறிப்பிட்ட ஒரு கருவியே ஆய்தம் எனப் பெயர்பெற்றது. போர் வீரன் வலக்கையில் வாளை ஏந்தி இருப்பான். இடக்கையில் கேடயத்தை தாங்கி இருப்பான். எதிரியை வாளால் தாக்குவான். எதிரியின் வாள், தன்னைத் தாக்காமல் கேடயத்தால் தடுத்து, காத்துக் கொள்வான். அந்தக் கேடயம் இரும்பால் செய்யப்பட்டு, வட்ட வடிவ அமைப்பில் இருக்கும். அதில், பிடிப்பதற்கென ஒரு பக்கத்தில் கைப்பிடி இருக்கும். மறுபக்கம் மூன்று புள்ளிகள் (ஃ) போன்ற வடிவமைப்பில் இரும்புக் குமிழிகள் இருக்கும். இடக்கையில் உள்ள கேடயத்தால் பகைவனைத் தாக்கினால், அந்த மூன்று குமிழிகள் போன்ற வலிய பகுதிகள், பகைவன் மீது கொட்டுவது போல் இடித்துத் தாக்கும் அந்தக் குமிழிகள் மூன்றில் இரண்டு கீழேயும், ஒன்று மேலேயும் ‘ஃ’ என்பது போல இருக்கும். அந்த ஆய்தம் போன்ற வடிவத்தைப் பெற்றிருப்பதால் இந்த எழுத்தும் அப்பெயரைப் பெற்றது. போர் வீரர்கள் போர்க்களத்தில் பயன்படுத்திய போர்கருவிகளில் சூலமும் ஒன்று. சூலம் கூரிய முனைகள் மூன்றைப் பெற்றிருக் கும். அந்த மூன்று முனைகளை மட்டுமே நோக்கினால் முப்புள்ளி யாகத் தோன்றும். சூலத்தின் முனைகள் மூன்றிலும், எலுமிச்சைப் பழங்களைச் செருகி நோக்கினால் ‘ஃ’ என்பது போலக் காட்சி தருவதைப் புரிந்து கொள்ளலாம். இக்காட்சியைக் கோயில்கள் சிலவற்றில் காணலாம். இந்த ஒப்புமை யாலும் முப்புள்ளி எழுத்து, ஆய்தம் எனப் பெயர் பெற்றது என்று தமிழ்த்தாத்தா. உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கர் மகா வித்துவான். ச. தண்டபாணி தேசிகர் கூறியுள்ளார். தமிழில் இலக்கணப் பெயர்களும் எழுத் துக்களின் பெயர்களும் காரணம் கருதியே பெயர் பெற்றுள்ளன. அவ்வாறே ஆய்த எழுத்தும் காரணம் கருதியே பெயர் (காரணப் பெயர்) பெற்றுள்ளது. நன்றி: அருண்குமார் Hseija Ed Rian அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று (49) நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும் (476) அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கஃ தின்றேல் பிணியன்னறோ பீடு நடை (1014).இந்த மூன்று குறளடிகளிலும் கவனிக்கில் ஃ என்பதினை தனியாக ‘அக்’ என உச்சரிக்கமுடியாது.’அஃ’ என முன் உயிர் சேர்த்து உச்சரிக்கவருகிறது..ஏன் ஃ கிற்க்கு தனி ய்ச்சரிப்பு வரவில்லை?.அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை ”ஃதும் ”பிறன்பழிப்ப தில்லாயின் நன்று என ஏன் உச்சரிக்ககூடாது?

திரு. ரியான் சத்விசாரம் தொகுப்பு=

=== திரு. ரியான் சத்விசாரம் தொகுப்பு=== கேள்வி: மனம் என்பதே உயிரின் அம்சம் தானே உயிர் சக்தியின் செலவிடுதலே மனதின் இயங்கும் நிலை இதில் ஒடுங்குவதும் அடங்குவதும் உயிரின் சுயம் அன்றி வேறென்ன. . .ஐயா? Hseija Ed Rian: உயிர் இருப்பதனால் தான் மனம் இயங்குகிறது என்பது தெரிந்த ஒன்று... ஆனால் மனமானது உயிரின் அம்சம் தான் என்பது தெரியாத ஒன்று அல்லவா? உயிர், உடல், மனம் வெவ்வேறானவை, வெவ்வேறு குணாதிசயம் சேர்க்கையில் இயைந்து இயங்குவது. உயிரின் அம்சம் உடலுக்கு இருக்காது.... உடலின் அம்சம் உயிருக்கும் இருக்காது... உயிரின் அம்சம் மனதுக்கு இருக்காது.. மனதின் அம்சம் உயிருக்கும் இருக்காது... ஆனால் உடலெனும் கூட்டில் இவை அடக்கம். "நான்" என்பதே மனதின் ஆணிவேர்... சூட்சுமமாக அனுபவத்தில் நிலைகொளத்தான் அது புரிதலுக்கு வரும்... "நான்" இருப்பதினனல் மனம் என இருக்கிறது. "நான்" என்பது தான் மனம் என மலர்ந்திருக்கிறது... எப்போது "நான்" இல்லை என ஆகிறதோ.. அப்போது மனம் இல்லை என்றாகிறது. மிஞ்சுவது அறிவு மட்டுமே.. ஞானசொரூபமான வஸ்த்து. கேள்வி:  தூக்கத்தை பற்றி உங்களது கருத்து என்ன? Hseija Ed Rian: தூக்கம் என்பது "கவனம் அற” நிகழும் சங்கதி. அனைத்திலும் கவனம் அற்று போகையில் தூக்கம் நடக்கும்... அக மற்றும் புற நிகழ்வுகளில் இருந்து கவனம் அற அது வரும். இதுக்குத்தான் எவ்வளவோ சொல்லியும் ..மொக்கை என சொல்ராங்க...ஒருவேள சரியா இருக்குமோ? கவனம் என்கிறதை பற்றுதலே தூக்கம் வராம இருக்க வழி. கேள்வி: கவனிப்பவனை கவனித்தால் தூக்கம் வருவதை தடுக்கலாம் அப்படிதானே!!!! ???? Hseija Ed Rian: உபநிஷத்துகளில் ஒரு வசனம் ஞாபகத்துக்கு வருகிறது.. "உத்திஷ்ட்ட ஜாக்ரத” என்பதாகும். அதாவது ”ஜாக்கிரதைக்கு எழுவாயாக” என்பதாகும்.அதாவது கவனத்தை பற்றுவாயாக என விளக்கம். கேள்வி: கவனத்தை பற்றுதல் தான் வள்ளலார் சொன்ன "விழித்திரு" என்பதா? Hseija Ed Rian: ஆமாம். கேள்வி: மனம் உயிரில் ஒடுங்குவதுதான் தூக்கமா? Hseija Ed Rian: தூக்கத்துலயும் சரி விழிப்புலயும் சரி உயிர் இல்லாம இவை இல்லையே... மனம் உயிரில் இருந்து தோற்றம் பெற்றால் அல்லவா அதில் சென்று ஒடுங்கவும் தெரிந்திருக்கும்...அல்லவா? தூக்கத்தில் ஒடுங்க மனதுக்கு தெரிந்திருந்தால் மரணத்தின் போதும் ஒடுங்க முடிந்திருக்குமே... தெரியாததினால் அல்லவா உயிர் விட்டு போகிறது...அல்லவா? கேள்வி: உயிர் நிலைக்க பிராணன் அவசியமல்லவோ ...? Hseija Ed Rian: கருப்பையில் உயிருடன் இருந்த சுக்கில துளிக்கு ஏது பிராணன்? உயிரில் இருந்து பிராணன் வந்த பிற்பாடல்லவா மனதுக்கு மூன்று நிலை... சுக்கில துளிக்கு ஏது கனவும் நனவும்? கேள்வி: ஐயா. மரணத்தை சந்திக்கும் போது உயிர் பல கொடுமைகளை சந்திக்கும் என்று சொல்ராங்க அப்படி தூக்கம் வரும் போது ஏதுமில்லையே!!? Hseija Ed Rian: தூக்கத்தில் மனம் சப்தத்தில் ஒடுங்கியிருக்கும்.. மனதின் சூட்சும தன்மாத்திரையான ஆகாய ரூபம். மரணத்தில் இது இருக்காது. ஆகாய தன்மாத்திரையான சப்தம் உயிருடன் ஒன்றியிருக்கும்... ஆகையினால் அது ‘விட்டு போகாது’... மரணத்தில் விட்டு போகும்.. கேள்வி: தாயின் கருவில் உள்ள குழந்தை எப்படியா தூங்குது? Hseija Ed Rian: ஐயா.. இங்க ரெண்டு நிலைகள் கவனிக்க தகுந்தவை. பிறவிக்கு முன் பின் என. பிறக்கிறதுக்கு முன்ன பிராணன் வெடிக்கா நிலை... பிறவிக்கு பின் பிராணன் வெடித்த நிலை. சாதாரணமாக பிறவிக்கு பின் நிகழகூடிய மூன்று அவஸ்த்தைகளையே "நனவு, கனவு, தூக்கம்" என வகைபடுத்தி கொள்ளுகிறோம். கருவில் மனம் மொட்டாக இருக்கிறது, அதனால் மனம் வியாபிக்கவில்லை... மனம் வியாபிக்க வாயு விசும்பிதல் ஆகவேண்டும். கண்டம் பிரியவேண்டும். முதல் அழுகையினால் கண்டம் பிரிகிறது... அதற்க்கு முன் பத்தாம் மாதமும் சரி ஒன்றாம் மாதமும் சரி.. எல்லாம் வளர்ச்சி நிலை நோக்கி நகருதல் தாம்.. நிறை ஆகவில்லை. பிராணன் வெடிக்க மனம் சலனம் ஆரம்பிக்கின்றது. மூன்று அவத்தைகள் மனதுக்கு வந்து சேருகின்றது. கேள்வி: ஐயா கருவில் குழைந்தைக்கு சுவாசம் எப்படி நுகரும் தன்மை எப்படி? Hseija Ed Rian: சுவாசம் வெடிக்காது என சொன்னதினாலே புரியவேண்டியது.. அது ஒரு இடத்தில் சுழன்று கொண்டிருக்கும் என்பது தான்... இதனையே "சக்கரம்" என்பர். வெட்டுபட்ட சக்கரம் எனவும் வெட்டாத சக்கரம் என இரண்டு... வெட்டுண்ட சக்கரம் துண்டாகும்... துண்டான சக்கரம் கலை சிறுக்கும்... வெட்டாத சக்கரம் துண்டாகாது.. கலை சிறுக்காது... தட்டுண்டு போகாமல் தலைபடுவது எக்காலமோ..தெரியலியே ஐயா.. ❣️ நன்றி: திரு. ரியான் அய்யா அவர்கள் ❣️