Tuesday, December 6, 2022

சிவலிங்கம்

சிவலிங்கம் ----------------------------------------- மெய்ஞ்ஞான தேடலில் ஈடுபாடு உள்ளவர்களிடம் அவசியம் இருக்க வேண்டிய நூல்களுள் சிவானந்த போதம் எனும் நூலும் ஒன்று. குருவிடம் சரணடைந்த சீடன், மெய்ப்பொருள் குறித்த தனது சந்தேகங்களை யெல்லாம் கேட்க, சற்குரு வானவர் சீடனின் ஐயங்களுக்கு எல்லாம் விளக்கம் தந்து, சீடனின் மனத்தில் கப்பியுள்ள அறியாமை எனும் இருளை நீக்கி, அவன் உள்ளத்தில் அறிவெனும் சோதியை ஏற்றி வைக்கிறார். சிவானந்த போதம் என்னும் இந்நூல், வினா விடை வடிவில் இடையிடையே உரையாடல் உரைநடையில்- வசனத்தில் இருந்தாலும் இந்த நூலில் 83 பாடல்கள் உள்ளன. எளிமையான முறையில் தான் பாடல்கள் உள்ளன. இந்நூலில் இருந்து ஒரு பாடல். "அன்புடனே உடல் பொருள் ஆவி மூன்றும் அறுதியாய் அளித்து விட்டு நீதானையா தென்புடனே அடிமையெனச் சத்தியஞ்செய் சிதறாமல் நில்லப்பா தீக்ஷை வைப்போம் பின்புந்தன் செவிதானே யோனியாகப் பேசுமென்ற நாவுதான் லிங்கமாச்சு இன்பமுடன் அனுபோகத்திருக்க வென்றே இருசெவியில் உபதேசம் ஏற்றுவோமே." சிவானந்த போதத்தில் உள்ள ஒவ்வொரு பாடலும் ஞான ரத்தினங்கள். குருவானவர் சீடனுக்கு தீட்சை அளிக்கும் முன்பு, குருதட்சிணையாக சீடன் சமர்ப்பணம் செய்ய வேண்டிய காணிக்கை எதுவென குறிக்கிறது. உடல் பொருள் ஆவி மூன்றையும் சற்குருபிரான் அவர்களுக்கு தத்தம் செய்து கொடுத்து அன்புடனே அடிமைபோல் காத்திருக்க வேண்டும். அதன்பின்னரே ஆசான் உளம் கனிந்து தீட்சை அளிப்பார்கள். அதற்கடுத்து மெய்ஞானத்தில் பரிபாஷை சொல்லாக இருக்கும் " சிவலிங்கம்" குறித்து விளக்கம் தரப்பெறுகிறது. சிவலிங்கம் குறித்து தத்துவ அறிஞர்கள் ஆண் பெண் இவர்களின் குறி - யோனி என விளக்கம் தந்து பேசியும் எழுதியும் வந்துள்ளனர். ஆனால் சிவானந்த போதம் நூலில், சிவலிங்கம் என்பது, மெய்ஞானத்தை அருளுகின்ற ஆசானின் நாவு தான் லிங்கம். அந்த அருளமுதத்தை துய்க்கும்- இன்பத் தேன் வந்து பாயும் சீடனின் காதே- செவியே யோனியாகும் என மெய்ப்பொருள் விளக்கம் தருகிறது. இது குறித்து மெய்வழி ஆண்டவர்கள் திருவாய்மொழியில் " மாணவனின் ஆவிடை யோனியில் ஆசானின் நாத ரூப லிங்கம் போகிக்க போகிக்க ரிஷி பிண்டம் உருவாகிறது. இப்பிண்டம் இரவு தங்காது. உடனே பிறந்து விடும். இதைத்தான் ரிஷிபிண்டம் ராத்தங்காது என்பர். குருதேவரின் புணர்ச்சியினால் சமாதி நிலை எய்தினவனது மூச்சு வெளியே ஓடாது." இந்த போகம் சிவபோகம். இந்த அனுபவம் சிவானுபவம். இந்த இன்பம் சிவானந்தம். இது குறித்து விவரித்து கொண்டே போகலாம். இந்த மெய்விளக்கம் உறுதிபட, மேலும் இன்னொரு சித்தர் பாடல்வழி கண்டு தெளியலாம். சுப்பிரமணியர் ஞான சைதன்யம்-108 எனும் நூலின் பாடல் எண் 74. "நின்றதோர் குருவப்பா நன்றாய்க் கேளு நீதியுடன் சொல்லுகிறேன் விபரமாக அன்றதோர் குருவினது நாவே லிங்கம் அதிகமுள்ள சீஷனது காதே யோனி சென்றதோர் குருவினது உபதேசம் விந்து சிறப்புடனே கேட்கிறதோர் சிஷ்யன் நாதம் என்றதோர் அறிவுமனம் அறிந்தால் இன்பம் ஏகமெல்லாம் ஞான கெற்பம் பிறந்த வாறே." இப்படி சிவானந்த போதம் என்னும் நூலில் உள்ள ஒவ்வொரு பாடலும் ஞான முத்துக்கள். எம்பெருமானார் ஞான சூரியன் ஸ்ரீலஸ்ரீ சாலை யுகவான் ஆண்டகை அவர்கள், தங்கள் மெய்ஞான சபையில் சிவானந்த போத பாடல்களுக்கெல்லாம் விளக்கம் தந்து அருளிய தைக் கேட்டதெல்லாம் வாழ்வின் வசந்த காலம் தான்.

குண்டலினீயின் ரகசியம்

குண்டலினீயின் ரகசியம் - Ajiesh குண்டலிவாசி அகாரமடி மிடர்கண்டமதில் உகாரமடி உண்டுசுழியில் மகாரம் வைத்தால் சிவ சிந்தையிதல்லவோ ஞானபெண்ணே என பாடுவார்கள் சித்தர் பெருமக்கள்.பலபேருக்கு இது என்ன என்று புரிவதில்லை. குண்டலி என்பது ரெண்டு சக்திகள் சேர்ந்தது ,அகார சக்தியும் உகார சக்தியும். இப்படியான ரெண்டு சக்திகல் நேர் எதிரே எதிரே இயங்கும் இயற்கை உடையன. அதாவது ஒருசக்தியின் தலை மேல் நோக்கி பிரயானம் செய்ய,மற்றைய சக்தி நேர் எதிராக பிரயானம் செய்யும்.அதாவது ஒரு சக்தியின் தலையானது மற்றைய சக்தியின் வாலை கவ்வியபடி இருக்கும். இதை தான் குண்டலினி சக்தியாகிய பாம்பு உருவகம் தன்னுடைய தலையை தானே கவ்வி இருக்கும் என புனையப்பட்டுள்ளது.சக்தி தான் ரெண்டு எனிலும் அதற்க்கு உயிர் ஒன்றே, அதாவது, ரெண்டு சக்திகல் எதிர் எதிர் திசையில் இயங்கும் போது அச்சக்திகளின் மையம் ஒரு சுழலும் அமைப்பாக இருக்கும்.தையே சுழி எனும் உட்புகும் வாசல்.அச்சுழியின் மூலம் இச்சக்திகளின் இயக்கத்தை கட்டுப்படுத்தலாம். அகாரம் என்பது ஒரு உயிர் சக்தி, அதுபோல உகாரம் என்பதும் ஒரு உயிர் சக்தி.இப்படியான ரெண்டு உயிர்சக்திகல் ஒரு சுழியை மையமாக சுற்றுகின்றன.சீனாவின் லாவோட்சூ எனும் போகமுனிவரின் தாவோ மதத்தின் சின்னமானது இப்படி ரெண்டு சுழல் அமைப்புகள் எதிர் எதிர் திசையில் சுழலும் விதமாக சித்தரிக்கப்பட்டிருக்கும் என்பதை கவனிக்கவும். ரெண்டு சக்திகள் என கொள்ளப்படும் பாம்பானது எதிர்திசையில் சலனத்தை உடையது என பார்த்தோம் அல்லவா...,அது ஒன்று போக்கு எனவும் ஒன்று வரத்து எனவும் உருவகம். அதாவது அமிர்தவும் விஷமும் எனலாம்.இதை சரத்துக்கு உவமானமாகவும் கூறுவர்,ஆனால் சரத்திற்க்கும் குண்டலினிக்கும் வித்தியாசம் உண்டு.சாதாரன கதியில் உட்புகும் வாசியானது விஷமாகவும் வெளிப்புகும் வாசியானது அமிர்தமாகவும் பிரயானம் செய்கிறது. அதனால் ஆயுள் நஷ்ட்டம் ஏற்பட்டு மரனம் உண்டாகிறது.அதை மாற்றும் திறன் குருபிரான் அருளால் உண்டாகிறது.அதையே “ மாற்றிப்பிடிக்கும் வகை அறிவார்க்கு கூற்றை உதைக்கும் குறிப்பதுவாமே “ என மூலர் கூறுவதின் பொருள். சொல்லப்படும் வாசியானது ஒவ்வொரு நா்ளைக்கும் மாறி மாறி இயங்கும் தன்மையில் இருக்கிறது.வளர்பிறை தேய்பிறை எனும் கணக்கில் மாறி இயங்கும்.ஒரு சுற்று என்பது ஒரு போக்கு= ஒரு வரத்து சேர்ந்தது.அப்படி ஏழு நாளைக்கு,வாரத்திற்க்கு மூன்றரை போக்கும் மூன்றரை வரத்தும் இருக்கும்.மூன்றரை போக்கும் மூன்றரை வரத்தும் சேர்ந்து மூன்றரை சுற்று குண்டலினீ அமைப்பு என உருவகம். இப்படியான குண்டலினியை மகாரம்மெனும் நடு மய்யத்தில் கட்டப்படும் போது அவை ஒரு நேர்கோட்டில் அமைகின்றன,அதையே சுழிமுனை நாடி என்பார்கள்.அந்த நாடியானது மூலம் முதல் உச்சிவரை ஊடுருவும் தன்மையில் இருக்கும்.சாதாரன முறையில் மூலாதாரம் என்று மலத்துவாரத்தின் மையத்தை கூறுவார்கள்,ஆனால் அப்படி அல்ல. மூலாதாரம் என்பது இப்போது கானப்படும் தூல ஆதாரமான உடம்பு. அனைத்திற்க்கு மூல ஆதாரமாகி இருப்பது இந்த தூல உடம்பே. அனுபவமானது இந்த தூல உடம்பில் இருந்து தொடங்குகிறது. இந்த உடம்பின் அ்கமையத்தையே மூல விந்து என கொள்லவேண்டும்.அந்த மூல விந்துவே மகாரம் எனும் புள்ளி.,சுழியின் நடுக்கண்ணே புள்ளியன ஒளி மையம். ஒளிமையமான மகார புள்ளியில் இருந்தே அகார உகார சக்திகள் இயங்குகின்றன.அதனாலேயே மகாரத்தை மெய் என்கின்றனர், புள்ளி வருவது மெய் எனும் ஆதாரம்.ஏனைய பனிரெண்டும் உயிர் இயக்கங்கள்.அப்படி உயிரும் மெய்யுமானது மகாரம்.மெய்யிடம் விலங்குவது விந்து எனும் புள்ளி. அப்புள்ளியானது உயிரேற்றம் பெறும் போது மறைந்து அருவமாக நிற்க்கும். எப்படியெனில் ம்+அ=ம, ‘ம்’ எனும் போது புள்ளி இருக்கும்,ஆனால் உயிரேற்றம் பெற்று விடும்போது ‘ம’ என புள்ளி இல்லாது விளங்கும்.இப்போது ‘ம’ என்பது நாதம் எனப்படுகிறது.அதாவது புள்ளி இருக்கும் போது விந்து எனவும் உயிரேற்ரம் ஆகும் போது நாதமாகவும் திகழும். இப்படி முதல் ஆதாரமான தூலத்தை விட்டு உள்முகமாக’ ம்’ எனு ஒளி நிலை பிரயானம் ஆவதையே குண்டலினி ஏறுவது என்பார்கள்.மின்சார ரெயிலில் பயணம் செய்யும் போது வேகம் அதிகமாக அதிகமாக உடலில் ஒருவித உந்து இயக்கம் அதிகரிப்பதை போல, தூல உணர்ச்சியானது சடாரென சுருங்கும். ஆனால் நாம் உனர்வோடுதான் இருப்போம். மனமானது உள்முகமாக ஆமைக்கு உள்வலிவதை போன்று உட்புகும்.இப்படியான இயக்கம் மேலும் மேலும் உள்முகமாக திரும்புவது அனுபவிகள் உணர்வார்கள்.அப்படி சாதனை செய்வதினால் மனம் உள்வயப்பட்டு ஒன்றி நிற்பதையே யோகம் என்பர்.இதுவே குண்டலினீ ரகசியம்

வள்ளலார்

வள்ளலர் பிரான் தாம் விளம்பியிருக்கின்ற திரு அருட்பா உரைநடை மூலமாக எண்ணிறந்த ஞான ரகசியங்களை விட்டு சென்றிருக்கிறார். அதின்கண் பார்க்கையில் சன்மார்க்க கொடியின் ரகசியமே மேலோங்கி நிற்கின்றது. அதை விளக்குமிடத்து "நமது நாபி முதல் புருவ மத்தி ஈறாக ஒரு நாடி இருக்கின்றது, அந்த நாடியின் மேற்புறம் புருவமத்திக்கு உட்புறம் ஒரு சவ்வு தொங்குகின்றது. அதில் ஏறவும் இறங்கவும் செய்ய நாடிகள் இருக்கிறது" என்கிறார். இவையெல்லாம் சுட்டிகாட்டுவது அந்த பராசக்தி நிலையமகின்ற பர நிலை குறிப்பே ஆம் அல்லவா?. உடலுக்கு என கீழ் மூலம், உயிருக்கு என நடு மூலம், பூரணத்துக்கு என மேல் மூலம். இம்மூன்றையும் அறிண்ட்நிருக்கின்ற யோகியவனே மும்மூ்ல யோகி. “அடியாகி முடியாகி மூலந்தன்னில் முப்பொருளும் தானாகி நடுவுமாகி அடியாகும் மூலமதே அகாரமாகி அவனவளாய் நின்ற நிலை அணுவதாமே”                                 ~திருமூலர் ஞானம்.

Monday, December 5, 2022

பிரசாதம்

 கோயில்களில போனா கும்பிட்டு முடிஞ்சதுக்கு அப்புறம் பிரசாதம்ணு சொல்லி எதாச்சும் குடுப்பாங்கள்ல அது எதுக்கு? 

இந்த கேள்விய ஆண்டவர் கிட்ட கேட்டிருந்த அவரு உடனே சொல்லப்போறார் , எப்படீண்ணா,பிர+சாதம்ணு ஒரு ப்ளஸ் போட்டு விளக்கம் சொல்ல ஆரம்பிப்பார்.பிரசவம் என்பதுக்கும் இப்படி பிர+சவம் எனப்போட்டு விளக்கம் சொல்லியிருப்பார்,அதாவது பிறக்கும் போதே சவம் என.அது போல பிரசாதத்துக்கு பிறக்கும் போதே சாதம் ஆனவன்ணு விளக்கம் சொல்லுவார்.

உண்மையில் பிரஸவ் என்பது ஒரு வடமொழி வார்த்தை , பிரஸாத் என்ற வார்த்தை போல.பிரஸவ் என்றல் வெளிப்படுதல் எனப்பொருள்.அதுபோல பிரஸாத் என்றால் உள்ளத்திருப்தியின் வெளிப்பாடு என பொருள்.

கோயிலில் உறையும் இறைவன் நம்முடைய பிரார்தனைகளையும் வேண்டுதல்களையும் ஏற்றுக்கொண்டு  மகிழ்சி கொண்டுள்ளான் என வெளிப்படுத்துதல். பிரசாதம் வழங்காமல் பெறாமல் ஆலய தரிசனம் நிறைவு பெறாது.

இது போன்ற ஒன்று தான் குருப்பிரஸாதம் என்பதுவும்.இறை பிரஸாதத்தினால் குரு கிடைப்பார், குருப்பிரஸாதத்தினால் இறைவனும் கிடைக்கப்பெறுகின்றனர்.

முகாரவிந்த பேத விந்து

மனுத்தூலத்தில் இவ்வளவு வல்லபங்கள் இருந்தும் இருந்தும் அவற்றை கைபோட்டவர்கள் நாம் ஒருவர் தாம். *”முகாரவிந்த பேத விந்து நாதாதி இன்பனுச் சூடாகர சப்த சப்தாதிய சாயல்களும்”* -- என்று நாம் ஆதிமான்மியத்தில் கூறியிருக்கிறோமே. அதன்படி இந்த மனித குலம் ஒரே அச்சிலிருந்து உண்டாகியிருந்தாலும்-ஒருவருக்கு தரப்பெற்றுள்ள கருவிகளனைத்தும் மற்ற எல்லோருக்கும் தரபெற்றிருந்தாலும் எல்லோரும் ஒரே மாதிரியாகவா இருக்கிறார்கள்? ஆளுக்கு ஆள் வித்தியாசம் இருக்கிறதே-கண் காது மூக்கு முதலியன எல்லாம் ஒன்று போலவே தேகத்தில் முகம் என்ற ஒரே எல்லையில் அமைக்கபெற்றிருந்தாலும்,அந்த முகத்தில் எத்தனை சாயல்கள், எத்தனை பேதங்கள் இருக்கின்றன. சப்த குறியை எடுத்துகொண்டால் எல்லோரிடமும் அதை உண்டாக்குவது ஒரே கருவி தான், ஒரே அமைப்புதாநப்படி இருந்தாலும் தொனி ஆளுக்கு ஆள் வேறு வேறாயிருக்கிறது-இத்தனை முகாரவிந்த பேதங்களும், சப்த சப்தாதிய சாயல்களும் மனித ரூபத்தின் உள்ளே அமர்ந்து ஆட்சி புரிந்து கொண்டிருக்கிற அந்த தேவ சுவிட்சின் அகம் புற கிரண வீச்சுக்களே ஆகும். அத்தகைய அமலாண்மை ஆதியை, பிணை நிகரில்லா பெருவான் கடையை மனித உடல் பெற்ற ஒருவன், இந்த உடல் இருக்கும் போதே கைபோடவில்லை என்றால் அவனை நாய் நரி என்று கூட வேதம் சொல்லும்-மலத்தில் புழுத்த ஒரு புழு என்று கூட சொல்ல ‘அது’ சம்மதிக்காது ==யுகவான் சாலை ஆண்டவர்கள். செம்மை னல னேர் வழியை ஒரு தேவேசரின் திருவாய் மூலம் வெளியாக்குவதுவே ‘வஹது’. உன் செவி வாயிலாக அத் தேவ ஆசரியர் உனக்கு ஒலி வீட்டமுதை ஊட்டுகின்றார். சிபத்துக்கள்-வித்தியா தத்துவங்கள்-ஏழும் பிரயோஜன அளவில் ஏழு ஒலி வீடுகளாக இருக்கின்றன. அந்த அருந்தலத்திலிருந்து எடுத்து அளத்தலே அறிவாகார தேவ வர்ஷிப்பாகும். அவர்கள் அது னேரம் தன் சப்தமாகிய உயிரை உனக்கு செலவிடுகிறார்கள். அப்போது அந்த தேவ அமுதை ஆர்வத்துடன் உண்ணாதுவிட்டால் னீ கெடுவதோடு, அவர்களை ஏமாற்றிய பாவமும் உன் தலையில் வந்து விழும். உன் ஜீவனில் உள்ள சர்வ மாசுக்களையும் ஒழிப்பதே செவி உணவு.அருளமுதமாகிய தெய்வ மருந்து உண்டால் தான்,உன் ஜீவனில் கப்பியுள்ள அழிகரு வழிவரு பிறவிமாசு ஒழியும். --- சித்திரசபை வாழ் வள்ளல் சாலை ஆண்டவர் அவர்கள்.

பதி புருவத்தடி

பதி புருவத்தடி முனைகீழ் அண்ணாகென்னும் பவழ நிரம் போன்றிருக்கும் திரிகோணந்தாந் துதி பெறு சிங்குவை உபஸ்த்த சுகந்தியாக சுபாவ சாதனையினால் மவுனமாச்சு.. ❤️ஊமை என்பது எழுத்து வகை.... மவுனம் என்பது வித்தை வகை❤️ ஊதுகின்ற ஊதறிந்தால் அவனே சித்தன் -உத்தமனே பதினாறும் பதியேயாகும்- வாதிகளே இருநான்கும் பதியின் பாதம் வகை நான்கும் உயிராகும் மார்க்கம் கண்டு-சோதி பர்பூரனம் இவை மூன்றும் தூங்காமல் தூங்கியே காக்கும் போது -ஆதியென்ற பராபருனும் பரையும் ஒன்றாய் அண்ணாக்கின் வட்டத்துள் ஆகும் பாரே....அகத்தியர் ஞானம்

ஃப்ரூ

”ஃப்ரூ” என்பது வடமொழி மூலம், அதன் விரிவு “ஃப்ரூ மத்யம்”.... ”ஃப்ரூண” என்றால் கருப்பையில் தங்கிய கரு...அப்போது, ‘ஃப்ரூ மத்யம் என்றால் “கரு மையம்” என பொருள்.  “புருவம்” என்பது வடசொல் தமிழாக்கம், திரிபு பொருளாக்கம்.எந்த கருமையமோ..ஆண்டவா...?? “சுக்கில துளியுளே சுரோணிதத்தின் வாசலுள் முச்சதுர பெட்டுளே மூலாதார வரையுளே அச்சமற்ற சவ்வுளே அரி அரனுமொன்றுமாய் உச்சரிக்கும் மந்திரத்தின் உண்மையே சிவாயமாம்=சிவவாக்கிய சித்தன் பரமேஷ்ட்டி” தூல சரீரம் ஒரு முனை, சூட்சும தேகம் மறு முனை.  இதன் மத்யம் காரன சரீரம். சாதாரணமாக நாம் ஸ்தூலம் , அடுத்து அதனுள் சூட்சுமம், அதை கடந்து காரன தேகம் என சொல்வோம். ஆனால் அதன் புரிதல் வேறு. காரனமானது மத்திபமானது. இரு முனையும் அற்றது.. இரண்டற்றது. ஞதுரு ஒரு முனை, ஞேயம் மறுமுனை, ஞானம் மத்தியமானது.இரண்டுக்கும் நடுவே உலாவுவது... உறைவது.. இதையே ஹ்ருதயம் என்பர். ஹ்ருதயம் என்பதன் தாத்பரியமாவது மத்யம் என சொல்லுவது தான். நன்றி riansathvicharam.blogspot

பீரு முஹம்மது

தானாகி யன்னர் உருவாய்-திசை ஆயிரத்தெட்டும் செயறூத்திலாடித் தானொளி தான்கண்டு கூவ- இறை தானவ னாசையால் நோக்கியே பார்க்க ஆன புகழிறை யாசை-அந்த அன்னத்தின் மீதி லணுபோல் தரிக்க தானே சுடராய் வழிந்து-கடற் தன்னிற் றரித்தானைக் கண்டுகொண்டேனே தன்னாசையால் வந்த நாதம்-அவன் றானே கடலுயி ரோதிய வேதம் அன்னத்தெவையும் படைத்து-வகை யாவு முருவுக் குயிராய்ச் சமைத்துப் பின்னா லேவந்து பிறக்கப்-பல கோலமெடுக்கப் பிரபலஞ் செய்து மின்னிய மங்குல முன்ன-இந்த மேதினி நிறைந்தானைக் கண்டுகொண்டேனே வானத்தின் மேகம் பொழிய-இந்த வையகத் தானிய மெங்கும் நெளிய ஊனினான் மாதா பிதாவும்-அவன் உதிரமே நாதமாய் ஓசை முழங்கி ஆணொடுபெண்ணு மிணங்கி-வந்த ஆசையின் அவனொளி வாசந் துலங்கித் தானத்தில் வந்து அளித்தே-உருத் தானெடுத் தானையான் கண்டுகொண்டேனே அந்த கருவிந்து நாதம்-அதில் அன்னை யுதிரமுங் கூடின சூதம் அந்த கருவைந்து பூதம்-அது ஐந்தெழுத்தாகுமே ஓதிய வேதம் விந்துக்குள்ளே தழல் நீதம்-அது வீசும் புகையிலே யோடுஞ் சுவாசம் அந்த குதிரைமேலேறும்-நந்தம் ஆதியை நன்றாக கண்டுகொண்டேனே........ ~~~ பீரு முஹம்மது அப்பா

சத்தம் அடங்குமிடம்

சத்தம் அடங்குமிடம் சற்குரு நின்றவிடம் என்பர்... அதுவே மூச்சு அடங்குமிடம்.... இதுவே செவிச்செல்வத்தின் பயன் என்பர் அறிவுடையோர்..... சத்தம் அடங்குவது ஆகாயத்தில்.... எந்தளவு சத்தம் ஆகாயத்தில் சென்றாலும் அது ஆகாயத்தில் அடங்கிவிடும் இல்லயா?....(இது குழப்புற வேலை) காற்றும் ஆகாயத்தில் அடங்கிவிடும் இல்லயா... ஐம்பூத தன்மாத்திரைகளில் சத்தம் ஆகாயதன்மாத்திரை... அதாவது ஆகாயம் சத்தத்தில் அடங்கும்.... ஆகாயமே சத்தத்தில் அடங்கும்போது காற்றும் மூச்சும் எம்மாத்திரம்? நாதமும் நாதர்களும் மட்டுமே மிஞ்சுவர் எனப்பொருள் அன்பரே... வெளி அறிவுக்கு சத்தம் ஆகாயத்தில் அடங்கும் தான் தெரியும்... ஆனால் ஆகாயம் "சத்தத்தில் அடங்குவது அகமியம்"..... ஆதியில் வார்த்தை இருந்தது,அந்த வார்த்தை தேவனோடிருந்தது,அந்த வார்த்தை தேவனாயிருந்தது,,சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று, உண்டானதொன்றும் அவராலேயன்றி உண்டாகவில்லை...அவருக்குள் சீவன் இருந்தது, அந்த சீவன் மனிதருக்கு ஒளியாயிருந்தது....(பைபிள்) புறம் என்பது அகத்தின் விரிவே....தன்னிலையின் போதே இது தெளியும்....கூறுபட்ட மனதுக்கு இது விளங்காது....ஒருமையின் ஓர்மை நினைவுக்குள் அடங்கும் போதே ஒருமையும் பன்மையும் புலம்படப்புலரும்....புலத்துக்கு புலர்ந்ததா? உதாகரணமாக, எப்படி அகமியமான இறைவன் அகத்திலும் புறத்திலும் காரணகாரிய சொரூபராகி விளங்குகிறவராயும் விளங்கப்படுகிறவராயும் உளரோ அச்சொரூபம் என்க.. வள்ளலாரும் இதையே குறிக்கும் பொருட்டு, "இயற்கையில் தானே இருக்கின்றவராய் விளங்குகின்றவரும், இயற்கையில் தானே விளங்குகின்றவராய் இருக்கின்றவரும்" என்பார்.... உள்ளும் புறம்பும் இல்லாமல் உள்ளும் புறம்பும் நீக்கமற நிறைந்திருக்கும் நிறைவை அறிவதே....இதுவே ஆறாம் அறிவு.....அதுவே அகத்தையும் புறத்தையும் காணும் மார்க்கம்....அவ்ர்களே மனு ஈசர்கள் அதுவே சூக்கும "இருதயம்"..... அதை உணர்த்துபவர் குருபிரானே அன்றி வேறில்லர்.... இதை தெரிந்து கொள்ளாதவர்களே இங்கு அதிகம் சவுடால் விடுபவர்கள்....இருதயத்தை அறிந்தவனே அறிவுடயவன்....அவர்களே கற்றவர்கள்...அக்கல்வியே சாகாகல்வி.... தேடல் உள்ளவர்களுக்கு உள்ளார்...இருத்யமும் கிடைக்கும் ஒரு குரு வந்து உபதேசித்தும் குரு உபதேசித்த பொருள் என்ன என்று புரிந்திராத சீடர்களையும் பார்த்திருக்கிரேன்...அப்படியானால் குரு உபதேசத்தினால் ஒன்றும் ஆகப்போவதில்லை என்று பொருள்.....அதாவது வயல் வளமாக இருந்தாலே பயிர் செழிப்பய் வளரும்.... வளமில்லாது கூறுகெட்ட வயலினால் ஆவது என்ன? பயிர் முளை கூட விடாது....ஆதலால் குருவை அடையும் முன் வயலை பண்படுத்திக்கொண்டு அவர்கள் முன் செல்லவேண்டும்...அல்லாவிடில் அவர்கள் விதைக்கும் வித்தானது எந்த பயனும் இன்றி போகும்... ஏனெனில் அவர்கள் விதைக்கும் விதையானது பூமியின் விதையன்று...கூறுகெட்ட சீடனுக்கு அது என்னவென்றே தெரிய வாய்ப்பில்லை....அவர்கள் விதை தேவ உலகத்து விதை..அதன் வண்ணமும் வனப்பும் அறிந்தவரே அறிவார்...அது அறியா சீடன் பாரத்த மாத்திரத்திலே கதைக்கு உதவாது என சொல்லி தூக்கி போட்டு விடுவதே அதிகம்....பிறகு காலம் கடந்து காலன் கைஇகு கதி... பாராயணம் பண்னுவது என்பது ஒரு நொடுக்கு வித்தை...அதை அவர்கள் சாமர்தியமாக மறைத்து வைத்துள்ளனர்...வித்தை கற்றவர்களுக்கு தான் அதன் சூட்சுமம் தெரியும்.... சாமர்த்தியமாக அவர்கல் மறைத்தது நன்மைக்கே...எள்ளளவினும் அறிவற்ற மாக்கள் உய்யும் பொருட்டே அவர்கள் அதை மறைத்து அருள் செய்துள்ளனர்...எப்படியெனின், சிறு மதலைகளுக்கு கசப்பான மருந்தை கொடுக்கும் போது அவர்கள் அதை உமிழ்ந்துவிட வாய்புண்டு என்பதை கருத்தில் கொண்டே வைத்தியர் மருந்தை கருப்பட்டி பாகில் குழைத்து வைத்திருப்பார்,,, குழந்தையும் ஆவலுடன் வெறுப்பின்றி உட்கொள்ளும்...இதுவே நொடுக்கு வித்தை.... இப்படியெ பாராயனமும்...கருப்பட்டி பாகில் குழைத்த வித்தயே அது....பாகில் குழைக்காவிட்டால் அதன் கடுமை தன்மையினால் மக்கள் அதை நிரசித்துவிடுவர்.... முற்றிலும் இது குருபிரான் அவர்களின் கனிவே, கருணையே...அவர்கள் மனப்பூர்வமாக கிடைக்ககூடாது என்று மறைத்த மறைப்பு அல்ல...ஆனால் பண்பட்டவர்களுக்கு அதுவே போதும்...அதிலிருந்து மருந்தை தெரிந்து கொள்வர்...கருப்பட்டிபாகை சிறிது சொரண்டி பார்க்க வேண்டும்..சிறிது நிறம் மாற்றம் தெரியும் கொஞ்சம் கூட சொரண்டும் போது புரியும் உள்ளே இருப்பது அருமருந்து என்பது புரியும் ---❣️ திரு. ரியான் ஐயா  அவர்கள் ❣️

பரிசுத்தம்  என்றால்  என்ன?

❤பரிசுத்தம்  என்றால்  என்ன?💚 பரிசுத்தமானது  இணை  இல்லாத  மதிப்பிட  முடியாத ஒரு  உண்மை. நீ  காணும்  நிலைகளுக்கு  அப்பாலுக்கும்  அப்பாலானது. அப்பொருளுக்கு  நிகராக  வடிவு  உருவ  சொரூபம்  எதுவுமே  இல்லை.  அதைத்தான்     சைவம்  என்றும்,  பரிசுத்தம்  என்றும்  சொல்லப்படுகின்றது.  அப்பொருளை  இணை  துணை  நிகர்  இல்லாமல்  பரிசுத்தத்தைக்  கொண்டு  பரிசுத்தமான  தலத்தில்  நின்று  போற்ற  வேண்டும்.  அதே  இடத்தில்  நீ  பரிசுத்த  சைவமானால்  அத்தலம்  அவனாகும்.  அவன்  நீயாகும்,  நீயும்  அவனும்  உயிரும்  ஒளியுமாகும்.  நீ  உயிராகும்,  அவன்  ஒளியாகும்.  இரண்டும்  உயிருக்குள்  ஒன்றாகும்.  உயிருடைய  ஒளியுடைய  கண்தான்  அவ்வுண்மை.  அக்கண்ணைக்  கொண்டே  நீ  அவனுடைய  சிர் (இரகசியம்)  அதுவே  ஆத்ம  பேரின்பப்  பிரகாச  ஞான  ஜோதி  ஆகும்,  அவ்விடத்தில்  உனக்கு  உருவம்  இல்லை.  வடிவு  இல்லை.  அவ்விடம்  இணை  துணை  இல்லை.  அந்நிலை  ஒளிப்பிரகாசத்தின்  நிகரற்ற  தோற்றமாகும்.  அத்தோற்றத்திற்கு  என்மதம்,  உன்மதம்,  என்சாதி,  உன் சாதி,  என்  சமயம்,  உன்  சமயம்  என்ற  வேற்றுமைப்  பேதமை  மறுக்கள்  இல்லை.   சூபி